எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி:-காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் சார்பில், தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் 24-வது ஆண்டு அமர்வின் மூன்று நாள் மாநாட்டின் நிறைவு விழா பல்கலைக்கழக லெ.சித.லெ. பழனியப்பச் செட்டியார் நினைவு கலையரங்கில் நடைபெற்றது.
அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் பேரா. சொ.சுப்பையா அவர்கள் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று தலைமையுரையாற்றினார். அவர் தமது உரையில் ஒவ்வொருவரும் வரலாற்று உணர்வை வளர்த்துக்கொள்வதன் மூலம் மனித பண்பாட்டு வரலாற்றை நல்ல முறையில் அறிந்துகொள்ளவதுடன் நமது ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும் என்றார். பல்வேறு மாநிலங்கள், தேசங்கள், மற்றும் உலக வரலாறுகளை படிப்பதன்; மூலம் மன்னர்கள் எவ்வாறு ஆட்சி செய்தார்கள் என்பதையும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் பற்றியும் அதற்கு எவ்வாறு தீர்வு கண்டார்கள் என்பதையும் அறிந்துகொள்ளவதோடு மக்களுiடைய நலனுக்கு என்னவெல்லாம் செய்தார்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும் என்றார்.
இன்றைய இளைய சமூதாயத்தினர் வரலாற்றை முறையாக படிப்பதன் மூலம் அவர்கள் ஒரு சிக்கலான சூழலில் சரியான மற்றும் தைரியமான முடிவுகளை எடுப்பதற்கு வரலாற்று அறிவு பெரிதும் உதவும் என்றார். இன்றைய சூழலில் மாணவர்கள் தேசிய மற்றும் உலக வரலாறு பற்றிய தெளிவான அறிவை பெற்றிருந்த போதிலும் தத்தம் பகுதியைச் சேர்ந்த வரலாற்று முக்கியத்துவங்களை அவர்கள் சரிவர தெரிந்திருக்கவில்லை. எனவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தத்தம் பகுதியைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு முதலில் கற்றுத்தர வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு வரலாற்று பாடத்தின் முக்கியத்துவம் பற்றியும் வரலாற்றில் சிறப்பு பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை கோடிட்டு காட்டி அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் செயல்பட ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திரு. எஸ்.முத்தையா, வரலாற்று அறிஞர் மற்றும் எழுத்தாளர், நிறைவு விழா பேருரையாற்றினார். அவர்தம் பேருரையில் வரலாறு என்பது அனைவரும் ஆர்வத்துடன் படிக்கக் கூடிய பாடமாகும். வரலாறு படிக்கும் மாணவர்களிடம் வரலாற்றை பாடப்புத்தகங்களில் உள்ள செய்தியாக மட்டும கற்பிக்காமல் அதனை ஒரு கதை வடிவில் கற்பிப்பதன் மூலம் அவர்களிடையே ஒரு ஆர்வத்தை உருவாக்க முடியும் என்றார். அவர் மேலும் பேசுகையில் வரலாறு, புவியியல், குடிமையியல், சுற்றுப்புறவியல் இவை நான்கும் தனித்தனிப் பாடங்களாக 3ஆம் வகுப்பு முதல் கற்றுத் தரவேண்டும். அதோடு அந்தந்த பகுதியைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவத்துவத்தையும் கற்றுத்தருவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் ஒரு வரலாறு எனவே ஒரு மனிதன் குறைந்தது ஆயிரம் வார்த்தைகளைக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி தினந்தோறும் எழுத வேண்டும். அது வெளியீட்டிற்காக அல்ல. அது தன்னுடைய குழந்தைகள், மற்றும் சந்ததியினர் தங்களது முன்னோர்கள் எந்த சூழ்நிலைகளில் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை அறிய உதவும் என்றார்.
அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் வி.பாலச்சந்திரன் தனது வாழ்த்துரையில் வரலாற்றை படிக்கும் மாணவர்களுக்கு எந்தெந்த துறைகளிலெல்லாம் வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளன என்பதை விளக்கமாக விவரித்தார். குறிப்பாக அருங்காட்சியகத் துறை, தொல்லியல் துறை, புராதான சின்னங்களைப் பாதுகாக்கும் துறை, இதுபோன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்றார். எனவே வரலாறுபடிக்கும் மாணவர்கள் சீரிய முறையிலும் ஆர்வத்துடனும் ஆழமாகவும் வரலாற்றைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கொடைக்கானல் மதர்தெரசா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜானகி, முனைவர் என்.ராஜேந்திரன், பொதுச்செயலாளர்,தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் கருணாநந்தம், தலைவர், வரலாற்றுப் பேரவை, மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பி.ஜெகதீசன், ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக வரலாற்றுத் துறை பேராசிரியர் (பொ) முனைவர் கே.கிரு~;ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார். முனைவர் ஜி.பரந்தாமன் உதவிப் பேராசிரியர் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
தக்காளி சாஸ்![]() 1 day 16 min ago |
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 4 days 20 hours ago |
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 1 week 1 day ago |
-
பாகிஸ்தானில் பள்ளிக்கூடம் அருகே குண்டு வெடிப்பு : 4 மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயம்
06 Dec 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பள்ளிக்கூடம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
-
ஐபிஎல் போட்டி குறித்து மேக்ஸ்வெல்
06 Dec 2023இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
-
நிறைவு பெற்றது மகாதீபம்: திருவண்ணாமலையில் வரும் 27-ம் தேதி ஆருத்ரா தரிசனம்
06 Dec 2023தி.மலை : திருவண்ணாமலை மலை உச்சியில் காட்சி தரும் மகாதீபம் நேற்றுடன் நிறைவடைந்தது.
-
விரைவில் நிலைமை சீரடையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
06 Dec 2023சென்னை : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செய்து வருவதாக தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் விரைவி
-
அம்பேத்கர் வழியை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
06 Dec 2023புதுடெல்லி : 75 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் வகுத்த அடிப்படைக் கோட்பாடுகளை நீதித்துறை பின்பற்றி வருகிறது.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் : டிச.,9-ல் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
06 Dec 2023சென்னை, : தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், டிச.9-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனம
-
பி.எஸ்.எப். வீரர்கள் மீதான தாக்குதல்: முக்கிய பயங்கரவாதி பாக்.கில் சுட்டுக்கொலை
06 Dec 2023கராச்சி : காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பி.எஸ்.எப்.( எல்லை பாதுகாப்பு படை) வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவனும், லஷ்கர் பயங்கரவாத அமைப
-
ஆவின் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது : அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
06 Dec 2023சென்னை : இன்று முதல் ஆவின் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
-
விண்கலம் மூலம் விலங்குகளை விண்ணுக்கு அனுப்பிய ஈரான்
06 Dec 2023டெக்ரான் : மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் உள்ள ஈரான், தற்போது விலங்குகளைக் கொண்ட விண்கலன் ஒன்றினை விண்ணுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
-
சென்னை மழை-வெள்ள பாதிப்பு: நிவாரணம் வழங்கக்கோரி ஐகோர்ட்டில் முறையீடு
06 Dec 2023சென்னை : சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
-
டி.என்.பி.எஸ்.சி. செயலாளராக கோபால சுந்தரராஜ் நியமனம்
06 Dec 2023சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக கோபால சுந்தர ராஜ் ஐ.ஏ.எஸ்.
-
நிதி நிறுவன சொத்துகள் மோசடியாக விற்பனை: சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
06 Dec 2023மதுரை : பி.ஏ.சி.எல். நிதி நிறுவன மோசடியில் நீதிபதி லோதா குழு கட்டுப்பாட்டில் உள்ள சொத்துகள் போலி ஆவணங்களை பயன்படுத்தி முறைகேடாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ.
-
மீட்புப் பணிக்காக சென்னை வரும் வழியில் உயிரிழந்த சுகாதார அலுவலரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Dec 2023சென்னை : மீட்புப் பணிக்காக சென்னை வரும் வழியில் உயிரிழந்த சுகாதார அலுவலரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் மு.க.
-
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அண்ணாமலை ஆய்வு
06 Dec 2023சென்னை : சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
-
செம்பரம்பாக்கம், புழல் ஏரி நீர்திறப்பு குறைப்பு
06 Dec 2023சென்னை : சென்னை செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர் வரத்து குறைந்ததால், நீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது.
-
புயல் பாதிப்பு நிவாரண பணிகளில் உதவ தன்னார்வலர்களுக்கு தமிழக அரசு அழைப்பு
06 Dec 2023சென்னை : சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வரும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
சோனியா, ராகுலுடன் ரேவந்த் ரெட்டி சந்திப்பு : பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார்
06 Dec 2023புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள தெலுங்கானா மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி, அங்கு காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, சோனியா, ராகுலை சந்தித்து இன்று நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்கு
-
பயணிக்கு திடீர் உடல்நலக்குறைவு: இந்திய விமானம் அவசரமாக கராச்சியில் தரையிறக்கம்
06 Dec 2023கராச்சி : பயணிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவை அடுத்து இந்திய விமானம் அவசரமாக கராச்சியில் தரையிறக்கப்பட்டது.
-
உலகில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு 32-வது இடம்
06 Dec 2023நியூயார்க் : உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் கொண்ட பட்டியலில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 32-வது இடம் பிடித்துள்ளார்.
-
டி-20 பந்து வீச்சாளர்கள் தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய வீரர் ரவி பிஷ்னோய்
06 Dec 2023துபாய் : ஐ.சி.சி. டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் இந்திய இளம் வீரர். ஆப்கான் வீரர் ரஷித் கானை பின்னுக்குத்தள்ளி முன்னேறியுள்ளார்.
-
கொளத்தூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
06 Dec 2023சென்னை : கொளத்தூரில் பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
மாணவர்கள் நலன் கருதி நான்கு மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
06 Dec 2023சென்னை : கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக மாணவர்கள் நலன் கருதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்ப
-
இந்திய அணி கேப்டனாக ரோகித்தை நியமித்தது ஏன்? - முன்னாள் தலைவர் கங்குலி விளக்கம்
06 Dec 2023கொல்கத்தா : ரோகித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்?
-
போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் 22 விமானங்கள் ரத்து
06 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக ஓடுபாதையில் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்ட பிறகு விமான சேவை தொடங்கிய நிலையில் போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 22 விமானங்
-
இந்தி மாநிலங்கள் குறித்து சர்ச்சை பேச்சு: பாராளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார் தி.மு.க. எம்.பி.
06 Dec 2023புதுடெல்லி : இந்தி மாநிலங்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு மக்களவையில் வருத்தம் தெரிவித்துள்ளார் தி.மு.க. எம்.பி செந்தில் குமார்.