எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மற்றவர்களது உணர்வில் ஆழ்ந்து ஈடுபடும் பண்பே இரக்க உணர்வாகும். நமக்கு அடுத்திருப்பவரது உணர்வையும், பரிவையும் புரிந்துகொண்டு, அவர்களது இடுக்கண்களையும், துன்பங்களையும் துயரங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஆற்றலே இரக்கவுணர்வாகும். துன்பத்தில் ஆழ்ந்து கிடப்பவரது பாதிப்பை உணர்ந்து கொள்வதற்கு இரக்கவுணர்வு உதவுகிறது. மனத்தளவில் இருவேறு மனிதர்களுக்கு இடையில் நிலவும் இடைவெளியை இரக்கவுணர்வு இணைத்து விடுகிறது. துன்பத்தால் வீழ்ந்து கிடப்பவரது உள்ளத்தின் உணர்வுகளை அதே அலைகளின் அளவில் ஒத்து உணரச்செய்கிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் வழங்குமாறு இரக்கவுணர்வு தூண்டுகிறது. ஒருவருக்கு ஏற்பட்ட சோகத்தைத் தாங்கிக்கொள்ளுமாறு ஊக்கத்தையும், வலிமையினையும், ஆறுதலையும் அது வழங்குகிறது. சகமனித உணர்வு, தயவு ஆகியவற்றின் காரணமாக இரக்கவுணர்வு பெருக் கெடுக்கின்றது. மென்மையான இதயமும், பிறர் உணர்வின் மீதான அக்கறையும், துன்பத்தைப் பற்றிய கரிசனையும் காட்டுவது மெல்லுணர்வு எனலாம். அது ஒருவரது உள்ளத்தை மென்மையினாலும், அருள் பண்பினாலும் போர்த்துகின்றது. மனிதர்கள் சோதனையினாலும், இன்னல்களாலும், இடுக்கண்களாலும் வருந்தும்பொழுது ஆறுதல் அளிக்கிறது. துயருற்றவர் மனதில் இரக்கவுணர்வு தன்னம்பிக்கையைக் கட்டி யெழுப்புகிறது. அன்பைச் செயலளவுக்குக் கொண்டு செலுத்தும் ஆற்றல்மிக்கதாக இரக்கவுணர்வு திகழ்கிறது.
நிகழ்வு : “பாரிசு மாநகரத்தில் இரண்டு விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்பட்ட சிறப் பான வரவேற்பில் பங்குபெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பல்லாயிரக்கணக் கான மக்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு வெளியில் ஒன்று கூடினர். அவர்கள் இருவரும் வெளியே வந்து நின்ற பொழுது ஆம்ஸ்டிராங் முன்னாலே வந்தார்; காவல்துறையினர் ஏற்படுத்தியிருந்த தடைகளை உடைத்துவிட்டு, நேராகத் தான் சென்று அமரக்காத்திருந்த காரை நோக்கி அவர் செல்லவில்லை! வேறு திசையில் சென்றார். அனைவர் கண்களும் அவர் பின்னே சென்றன. சக்கர நாற்காலியில் அவரைக் காணவந்த மனிதரை நோக்கிச் சென்றார்.
கால்கள் ஊன முற்றிருந்த அந்த மனிதரால் நடக்க இயலாது. தனது அறையின் சன்னல் வழியாக ஆம்ஸ்டிராங் அவரைப் பார்த்திருந்தார். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த நாங்கள் அனைவரும் அழகானதொரு காட்சியினைக் கண்டோம். பழைய நெருங்கிய நண்பர்கள்போல இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். என்னருகில் இருந்த நண்பர் என்னிடம் சொன்னார்: “அற்புதமான காட்சி இல்லையா? உலகிலேயே வேகமாகப் பயணம் செய்யும் மனிதரும் உலகில் மெதுவாகச் செல்லும் மனிதரும் சந்தித்துக்கொள்கிறார்கள்.” அப்போது என் உள்ளத்தில் ஒரு கேள்வி உதய மாகிறது. எது மிகக் கடினமானது? நிலவுக்குச் செல்வதா? அல்லது நடையற்றுப் போன மனிதர் மீது அக்கறை காட்டுவதா?
இரக்கவுணர்வைப் பண்படுத்தி வளர்த்துக் கொள்ள வழிமுறைகள் : துன்பத்தில் கிடந்து தவிப்போரை உணர்வுப்பூர்வமாகப் புரிந்து கொள்ளுதல், மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், நெருக்கடியான வேளைகளில் ஒருவரைப் புரிந்துகொண்டு இசைவான உணர்வை வெளிப்படுத்துதல், மூளை வளர்ச்சி குன்றிய, மனநிலை பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்தல், மக்கள் நோயினால் பிடிக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுதல், பிறர் துன்பங்களை எதிர்கொள்வதற்கு உதவி புரிதல், மற்றவர்களிடம் இனிமையாக வும், ஈடுபாடுகாட்டும் முறையிலும் நடந்துகொள்ளல், நலிவுற்றவர்பால் அக்கறை காட்டுதல், துன்பத்தில் வீழ்ந்து கிடப்போருக்குக் கைகொடுத்து உதவுதல், நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறுதல், வயது முதிர்ந்தோர், புறக்கணிக் கப்பட்டோரைப் பேணுதல், இயற்கைச் சீற்றங்களாகிய வெள்ளம், தீ விபத்து, நிலநடுக்கம், புயல், மழை முதலிய பாதிப்புகள் ஏற்படும்போது அக்கறையை வெளிப்படுத்துதல்.
சேவை : அறிவு, உள்ளம், உடல் ஆகியவற்றைப் பிறர் நலனுக்காக அவர்களது தகுதி, சாதி, வர்க்கம் பாராமல் செயல்படுத்துவதே சேவை. தன்னலமற்ற சேவை புரிந்து பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்குச் செயல்படுவதே சேவையாகும். உடல் உழைப்பின் மூலமாக வளர்ச்சிப் பணிகளுக்கான பங்களிப்பை ஒருவர் வழங்குவதே சேவையாகும். கல்விப் பயிற்சி வாயிலாக ஒருவரது உள்ளடங்கிய ஆற்றல்களைக் கண்டுகொள்ள சேவைச் செயல்பாடு உதவுகிறது.
மற்றவர்களது தேவைகளைக் குறித்துச் சேவை அக்கறை கொள்ளுகிறது. ஒருவருடைய நன்னடத்தை, ஆளுமை ஆகியவற்றின் வளர்ச்சிக்கான ஏராளமான வாய்ப்புகளைச் சேவை ஏற்படுத்துகிறது. கைம்மாறு கருதாமல் தன்னலமின்றி நம்மைத் தருவதற்குச் சேவை உறுதி தருகிறது.
கதை : ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார் ஒருவர். வுழியில் கள்வர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர். அவரிடம் இருந்த ஆடை உள்ளிட்ட எல்லாவற்றையும் பறித்துக்கொண்டனர். அவரைக் காயப்படுத்திக் குற்றுயிராய்க் கிடக்குமாறு அடித்துப் போட்டனர். சாலையோரம் கிடந்த அவரைப் பார்த்தவாறு பலரும் கடந்து சென்றார்கள். ஆனால் எவருமே காயமுற்றவருக்கு உதவி செய்ய முன்வரவே இல்லை.
ஆனால் ஏழை மனிதர் ஒருவர் கருணையோடு அவரைக் கண்டு மனமிரங்கினார். அவரது காயங்களைக் கட்டினார். அவரைத் தூக்கினார்; மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார் - அவர் அருகிலேயே இருந்து கவனித்துக்கொண்டார். மறுநாள் மருத்துவமனை உரிமையாளருக்குத் தம்மிடமிருந்த பணத்தையும் எடுத்துக்கொடுத்தார். இரண்டு நாட்கள் கடந்த பிறகு தாம் திரும்பி வரும்போது ஆகும் செலவுகளைக் கொடுத்துவிடுவதாக உறுதி கூறினார்.
சேவை மதிப்பு நலனைப் பண்படுத்தி உருவாக்கிக் கொள்ள வழிமுறைகள் : தன்னலமற்ற சேவை மனப்பான்மையுடன் மற்றவர்களுக்கு நன்மை செய்தல். தேவை கருதி எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சிறிய உதவிகள் செய்தல். மற்றவருக்கு உதவி புரிதல். ஆறுதல் கூறுதல், வழிகாட்டுதல். வலியச் சென்று பிறருக்கு உதவுதல். பிறருக்கு உதவி செய்வதற்காக சொந்தத் தேவைகளையும் நலன்களையும் தியாகம் செய்தல். பிறர் எளிதில் சந்திப்பதற்கு உரியவராக இருத்தல். இன்னல்கள் நேரிடும்போது தக்க நேரத்தில் உதவுதல். முதியோர், பார்வையற்றோர் இல்லங்களுக்குச் சென்று உதவுதல். நாட்டுக்கு நற்பணி செய்யத் தயாராக இருத்தல்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.