எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகத்தில் சசிகலா உறவினர்கள் வீடுகளில் கடந்த 5 நாட்களாக நடைப்பெற்ற வருமானவரி சோதனை நேற்று நிறைவடைந்தது. சோதனையை அடுத்து விசாரணைக்காக வருமானவரி அலுவலகத்தில் விவேக் மற்றும் புகழேந்தி ஆஜராகினர்.
வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது வருமான வரித்துறை கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் சசிகலா, நடராஜன், டி.டி.வி.தினகரன், திவாகரன், நடராஜன், இளவரசியின் மகன் விவேக் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகச் சென்று சோதனையைத் தொடங்கினர். தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வந்தது. முதலில் 187 இடங்களில் ஆரம்பித்த இந்த சோதனை படிப்படியாக 200 இடங்கள் வரை நடைபெற்றது. நேற்று முன்தினம் 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை இறுதிக்கட்டத்தை எட்டியது. சசிகலா குடும்பத்துக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை, ஜெயா தொலைக்காட்சி, அதன் தலைமை நிர்வாக அதிகாரி விவேக் ஜெயராமன் இல்லம், அவரது சகோதரி கிருஷ்ணபிரியா வீடு, ஜாஸ் சினிமா அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் பத்திரிகை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்றும் சோதனை நடைபெற்றது.
விசராணைக்கு ஆஜர்
இந்நிலையில், கடந்த 5 நாட்களாக நடைபெற்ற சோதனை நிறைவுபெற்றது. 187 இடங்களில் 355 பேரை குறிவைத்து நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள், பணம், நகை உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், நகை, பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை கணக்கிடும் பணியும் மறுபுறம் நடப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே விசாரணைக்காக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, போயஸ் தோட்ட உதவியாளர் பூங்குன்றன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமார் உள்ளிட்டோருக்கு வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை அடுத்து அவர்கள் நேற்று நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை முன்பு ஆஜரானார்கள்.
திவாகரனுக்கு சம்மன்
தஞ்சை மாவட்டம் சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரனின் இல்லம், அவரது கல்லூரியில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை மற்றும் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள திவாகரன் மகள் வீட்டில் நடைபெற்ற சோதனையை அடுத்து திவாகரனுக்கு வருமான வரித்துறை இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.
ஜெயா டி.வி. அலுவலகம்
இதற்கிடையே, சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகத்தில் 5 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது. ஜெயா டி.வி. அலுவலகத்திலும் 9-ம் தேதி முதல் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வந்தது. போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவி பழைய அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. 5-வது நாளாக நேற்றும் ஜெயா டிவி உள்ளிட்ட சில பகுதிகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. ஜெயா டிவியில் நேற்று பிற்பகல் சோதனை நிறைவடைந்தது. இந்த சோதனைகளில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அவற்றை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது.
விசாரணைக்கு...
சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் இல்லத்தில் சோதனை நிறைவு பெற்ற பின்னர், ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர். வருமான வரிசோதனை முடிந்த பிறகு விவேக்கை அங்கேயே சம்மன் வழங்கி விசாரணைக்காக வருமானவரி துறையினர் அழைத்து சென்றனர். மேலும், சசிகலா உறவு வட்டாரங்களை சேர்ந்த சுமார் 200 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்திருப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
குஜராத்திற்கு வழங்கியதை பீகாருக்கு வழங்கவில்லை பிரதமர் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு
25 Oct 2025பாட்னா: பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பீகாரில் வெற்றியை தேடுவதா? என்று தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டினார்.
-
வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
25 Oct 2025நெல்லை: கொடுமுடியாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி மேலும் தீவிரம்
25 Oct 2025சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தினை அமல்படுத்தும் பணியை விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகள் மேலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
அசாமில் மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை
25 Oct 2025கவுகாத்தி: சாம் என்கவுன்டரில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
சிறையில் கைதியுடன் உல்லாசம்: இங்கிலாந்தில் பெண் அதிகாரிகள் சிக்கினார்
25 Oct 2025லண்டன்,: சிறையில் கைதிகளிடம் உல்லாசமாக இருந்த பெண் அதிகாரி சிக்கினார்.
-
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து
25 Oct 2025வாஷிங்டன்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஒருநாள், டி- 20 கிரிக்கெட்: விராட் கோலி உலக சாதனை
25 Oct 2025சிட்னி: சர்வதேச வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்) கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 18,443 ரன்கள் குவித்தன் மூலம் வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிக ரன் குவித்
-
தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு
25 Oct 2025சென்னை: தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பா நடைபெற்று வருகிறது.
-
டெல்லி: தங்க கட்டிகளை மறைத்து விமானத்தில் கடத்திய பெண் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் 6 தங்க கட்டிகளை உள்ளாடையில் மறைத்து விமானத்தில் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
-
பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர் சென்னை மாநகராட்சி தகவல்
25 Oct 2025சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
-
தனியார் பல்கலை. திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் தகவல்
25 Oct 2025சென்னை: 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.
-
அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்
25 Oct 2025அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம்: புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி
25 Oct 2025கர்னூல்: ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
-
பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு
25 Oct 2025கோபால்கஞ்ச்: பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு தெரிவித்தார்.
-
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தாய்லாந்து ராணி காலமானார்
25 Oct 2025பாங்காக்: தாய்லாந்து ராணி காலமானார் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
-
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: அதிக ரன், விக்கெட் வீழ்த்திய வீரர்களில் இந்தியா முதலிடம்
25 Oct 2025சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா - 202 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.
-
பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம்: மேற்குவங்கத்தில் டாக்டர்கள் போராட்டம்
25 Oct 2025மும்பை: பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம் குறித்து மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம்: டெண்டர் கோரியது தமிழக அரசு
25 Oct 2025சென்னை: சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம் அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியது.
-
விபத்தில் உயிர் தப்பிய உ.பி. அமைச்சர்
25 Oct 2025பிரோசாபாத்: உத்தர பிரதேசத்தில் விபத்தில் இருந்து அமைச்சர் பேபி ராணி உயிர் தப்பினார்.
-
டெல்டா மாவட்டங்களில் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
25 Oct 2025சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் சேதங்கள் வேளாண் மற்றும் வருவாய் துறை அலுவலர்களால் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
-
மோன்தா புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
25 Oct 2025சென்னை: மோன்தா புயலால் தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
-
கரூர் நெரிசல்: மத்திய அரசின் ரூ.2 லட்சம் நிதி பாதிக்கப்பட்டோரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது
25 Oct 2025கரூர்: தமிழக வெற்றி கழகத்தின் தலைவா் விஜய் செப்.27 இல் கரூா் நகரில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 போ் பலியானவர்களின் குடும்பத்தி
-
நீதிபதி குறித்து அவதூறு வழக்கில் ஜாமீன் கோரிய ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மனு மீது பதிலளிக்க உத்தரவு
25 Oct 2025சென்னை: நீதிபதி அவதூறு வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தேவர் ஜெயந்தி- குருபூஜை முன்னிட்டு ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்
25 Oct 2025ராமநாதபுரம்: தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு மூடப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.


