எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி இந்தியா முழுக்க நீட் தேர்வுகள் நடைபெற உள்ளன. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, நாமக்கல், நெல்லை, வேலுர் உட்பட இந்தியா முழுவதும் 104 நகரங்களில் 2200 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத் உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு எழுதலாம்.
இத்தேர்வுக்கான கட்டணம் ரூ.ஆயிரத்து நானூறு ஆகும். பட்டியல் இனத்தவர்களுக்கு ரூ. 750 ஆகும். மூன்று மணி நேரம் நடைபெற உள்ள இத்தேர்வில் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவிரவியல் ஆகிய பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் கேட்கப்படும். இதில் ஒருவினாவிற்கு நான்கு விடைகள் இருக்கும். அவற்றில் சரியான விடையை தேர்வு செய்து டிக் செய்தால் போதும். 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடநூல்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும். ஒரு சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு தவறான விடைக்கு 1 மதிப்பெண் கழிக்கப்படும். விடையளிக்காவிட்டால் மதிப்பெண் கிடைக்காது, கழியாது. மொத்தம் 720 மதிப்பெண்கள் ஆகும். இந்த தேர்ச்சி மதிப்பெண் என்பது ஒவ்வொரு ஆண்டும் வேறுபடும்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை போல நீட் தேர்வும் ஒரு சாதாரண தேர்வுதான் என்ற மனநிலையில் மாணவர்கள் தைரியத்துடனும் ஆழ்ந்து படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் வினாக்களுக்கு விடைகள் பக்கம், பக்கமாக எழுதுவது போல் நீட் தேர்வில் தேவையில்லை. மாநில பாடத்திட்டத்தில் படித்து விட்டு சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வினாப் புத்தகங்கள் கொடுக்கப்படுகிறது. குறைந்த கால அவகாசத்தில் இதை படித்து தயாராக வேண்டும் என்ற மன பயம் இருக்கக் கூடாது.
சி.பி.எஸ்.சி என்பது நீட் தேர்வை நடத்தும் அமைப்புதான். பாடத்திட்டத்திற்கும் அந்த அமைப்பிற்கும் தொடர்பு கிடையாது. பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகள் தான் வரும் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். பொதுத் தேர்வு எழுதி முடித்தபிறகு கிடைக்கின்ற சுமார் 50 நாட்களில் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பாடங்களை நாட்களை ஒதுக்கி திட்டமிட்டு படிக்கவேண்டும்.
பலமுறை எழுதி பார்க்க வேண்டும். அவற்றை திருத்தி தவறுகளை தெரிந்துகொள்ளவேண்டும் வேதியியல் இயற்பியல் பார்முலாக்களை தொகுத்து வைத்து பலமுறை படித்து பார்த்து மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். சிபிஎஸ்சி இணையதளத்தில் https://cbseneet.nic.in/cbseneet/Online பாடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றையும் பழைய வினாத்தாள்களையும் தரவிறக்கி முழுமையாக படிக்க வேண்டும். இளம் வயதில் வாய்பாடுகள் வேகமாக சொல்லும்போது திடீர் என தடைபடும். அப்போது முதலில் இருந்து சொன்னால்தான் விட்ட இடத்தில் இருந்து தொடர்ச்சி நினைவிற்கு வரும். உதாரணமாக இரண்டாம் வாய்பாடு என்றால் இரண்டு இரண்டாக பெருக்கல் அல்லது கூட்டல் என்கிற அடிப்படையை புரிந்து கொண்டால் வாய்பாடு தடைபடாமல் எளிமையாகி விடும். அதுபோல நீட் தேர்வில் மொத்தமுள்ள நான்கு கேள்விகளில் எது சரியான விடை என்று கண்டறிந்து படித்து தயார் ஆவதை போல மற்ற மூன்று பதில்கள் ஏன் தவறானது என்கிற அடிப்படையை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் கேள்விகள் எந்த வடிவத்தில் வந்தாலும் எளிமையாக பதில் தர முடியும்.
தமிழக அரசு நீட் தேர்வுக்கான தொடுவானம் பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பயிற்சி நடத்துகிறது. சி.பி.எஸ்.சி பாட புத்தகத்தின் அடிப்படையில் நீட் தேர்வுக்கான 10 பாகங்களை கொண்ட புத்தகங்களையும் தயாரித்துள்ளது. அவற்றையும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
தேர்வுகுறித்த வழக்கமான மிகையான பயம் இல்லாமல் மன தைரியத்துடன் மாணவர்கள் இந்த தேர்வையும் சாதாரணமாக எழுதி வெற்றி பெற முடியும். அதற்காக உரிய முறையில் தங்களை தயார்படுத்திக் கொள்வதே முக்கியம்.
இத்தேர்வு குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி மதியழகன் கூறுகையில், நீட் என்னும் தகுதித்தேர்வு, தாவரயியல், விலங்கியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் 45 வினாக்கள் வீதம் மொத்தம் 180வினாக்களையும் ஒவ்வொரு விடைக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்களையும் கொண்டதாகும்.
தமிழக அரசின் பாட திட்டத்தின்படி தேர்வு எழுதும் மாணவர்கள் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடத்தினை வரிக்கு வரி முழுமையாகவும் ஆழ்ந்தும் படித்தல் அவசியம். கூடுதலாக மத்திய பாடதிட்டத்தின் 8ஆம் வகுப்பு 9 மற்றும் 10ஆம் வகுப்பு புத்தகங்களை படித்து செல்வது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தேர்வு நேரத்தை முறையாக கணக்கிட்டு முதலில் உயிர் அறிவியல் பின்னர் வேதியியல் அதை தொடர்ந்து இயற்பியல் வினாக்களுக்கு விடையளிப்பது நல்லது. இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் கணித அடிப்படையிலான வினாக்கள் கேட்கப்படும். அவற்றை நன்றாக பயிற்சி செய்துகொண்டு விரைவாக விடையளிக்கவேண்டும். முந்தைய தேர்வுதாள்களையும் தமிழக அரசு வழங்கியுள்ள வினா வங்கியையும் முழுமையாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். தேர்வுபயம் நீங்கி தெளிவாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று அதிக மாணவர்கள் மருத்துவ மாணவராக தேர்வுபெறவேண்டும்.
இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அதிகாரி வீ.மதியழகன் தெரிவித்தார்.
நடைபெற உள்ள நீட் பொதுத்தேர்வை தமிழக மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுதி அதிக மாணவமாணவிகள் தேர்வாகிட வாழ்த்துக்கள். இந்த நீட் தேர்வு சிறப்பு மையங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வித் துறையில் ஒரு பெரிய புரட்சியையே இந்த அரசு ஏற்படுத்தி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 days ago |
-
காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் : டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
30 Jun 2025சென்னை : காவலாளி அஜித் குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
சந்தேக வழக்கில் அழைத்து சென்று தாக்கியது ஏன்? கோவில் காவலர் கொலை வழக்கில் காவல் துறைக்கு ஐகோர்ட் கேள்வி
30 Jun 2025மதுரை, ‘மடப்புரம் கோவில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்?
-
வெறும் இணைப்புதான்; பிணைப்பு இல்லை; அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து திருமாவளவன கருத்து
30 Jun 2025சென்னை : அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ ஈரான் மதகுரு அமெரிக்க அதிபர், நெதன்யாகு மீது கடும் விமர்சனம்
30 Jun 2025தெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல
-
குட் டே திரைவிமர்சனம்
30 Jun 2025உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்தும் ஏற்றுமதி நிறுவன மேலாளர்.
-
விமான விபத்து விசாரணை: மத்திய அமைச்சர் புதிய தகவல்
30 Jun 2025புதுடெல்லி : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, திட்டமிட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா?
-
கர்நாடாக துணை முதல்வருடன் வலுவான பிணைப்பு முதல்வர் சித்தராமையா தகவல்
30 Jun 2025பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே.
-
வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு
30 Jun 2025சென்னை, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
-
அமெரிக்கா: தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
30 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் காட்டுத்தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் தடை
30 Jun 2025புதுடில்லி : சிறுவன் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
எண்ணெய் கப்பலில் தீ விபத்து: 14 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
30 Jun 2025அகமதாபாத், குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
-
தெலங்கானா: தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 8 பேர் கருகி பலி
30 Jun 2025ஐதராபாத், ஐதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்கை புகழ்ந்த ட்ரம்ப்
30 Jun 2025வாஷிங்டன் : எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த மசோதா, செனட்டில் நிறைவேறி உள்ளது. இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, ''எலான் மஸ்க் சிறந்த மனிதர்.
-
7 கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி தமிழ்ப்பெண் முத்தமிழ்ச்செல்வி சாதனை
30 Jun 2025சென்னை, எவரஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ்ச்செல்வி, அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குள் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைகளை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
30 Jun 2025வாஷிங்டன்: இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
-
திருக்குறள் திரைவிமர்சனம்
30 Jun 2025வள்ளுவநாட்டில் வாழும் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதோடு, திருக்குறள் நூலையும் எழுதி வருகிறார், அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார் மனைவி வாசுகி.
-
மார்கன் திரைவிமர்சனம்
30 Jun 2025பெண் ஒருவர் மர்மமாக இறந்து கிடக்கிறார். கொலை பற்றி விசாரித்து வரும் காவல் அதிகாரி விஜய் ஆண்டனி, அஜய் தீசன் என்பவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார்.
-
பெல்ஜியம் கார் பந்தயம்: அஜித்குமார் அணி முதலிடம்
30 Jun 2025ப்ரூசெல்ஸ் : பெல்ஜியமில் நடந்த ஜிடி3 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
-
விஜய் சேதுபதி மகனை இயக்கும் சண்டை இயக்குனர்
30 Jun 2025விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படம் பீனிக்ஸ்.
-
சட்டம் - ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது
30 Jun 2025சென்னை, சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
-
இந்த வாரம் வெளியாகும் பறந்து போ
30 Jun 2025ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பறந்து போ'.
-
சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்ததில் 11 பேர் பலி
30 Jun 2025கெய்ரோ : சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டதில், தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
3BHK டிரெய்லர் வெளியீட்டு விழா
30 Jun 2025சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் '3BHK'. ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
-
பயங்கரவாதி மசூத்அசார் ஆப்கானிஸ்தானில் பதுங்கல்?
30 Jun 2025காபூல், இந்தியாவில் பல பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத்அசார் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி ஆப்கானிஸ்தானி
-
ஓஹோ எந்தன் பேபி இசை வெளியீட்டு விழா
30 Jun 2025ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. அசோசியேஷன் வித் குட் ஷோ.