எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 675 கூட்டுறவு சங்கங்களில் உள்ள 6973 நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நான்கு நிலைகளில் நடைபெறவுள்ளது. கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்தல் குறித்த ஆய்வுக்கூட்டம் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன், (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது. இவ்வாய்வுக் கூட்டத்திற்கு கலெக்டர் சி.அ.ராமன், முன்னிலை வகித்தார்.
ஆய்வுக்கூட்டம்
இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட கூட்டுறவு சங்க அலுவலர்களுக்கு மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் தேர்தல் குறித்து அறிவுருத்தியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் சரக துணைப்பதிவாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட செயற்பதிவாளர்கள் மீன்வளத்துறை, கைத்தறி துணிநூல் துறை, வேளாண்மைத் துறை, கதர்கிராம தொழில் வாரியம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறை, கூட்டுறவு வீட்டு வசதி துறை, கூட்டுறவு பால் வளத்துறை, மாவட்ட தொழில் மையம், பட்டு வளர்ச்சித் துறை, சமூக நலத்துறை ஆகிய பத்து செயற்பதிவாளர்களில் 388 சங்கங்களுக்கும் பதிவாளர் கட்டுப்பாட்டில் 287 சங்கங்கள் ஆக மொத்தம் 675 சங்கங்களில் 6973 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு முதல் கட்டத்தில் நான்கு நிலைகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் தொடர்பாக வாக்காளர் பட்டியல் தேர்தல் நடைபெறும் இடங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு வாக்காளர் பட்டியல் அலுவலரால் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. வேப்புமனு தாக்கல் வருகின்ற 26.03.2018 ஆம் தேதியும் வேட்புமனு பரிசீலனை 27.03.2018 ஆம் தேதியும், வேட்பு மனு திரும்பப் பெறுதல் 28.03.2018 ஆம் தேதியும், அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். மேலும் தேர்தல் வாக்குப்பதிவு முதல் கட்டத்தில் முதல் நிலையில் 02.04.2018 அன்றும், இரண்டாம் நிலை 07.04.2018 அன்றும், மூன்றாம் நிலை 16.04.2018 அன்றும், நான்காம் நிலை 23.04.2018 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
பயிற்சி வகுப்பு
வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் மாவட்ட தேர்தல் அலுவலரால் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்தல் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் கூட்டுறவு சங்க அலுவலர்களால் எடுக்கப்பட வேண்டும். தற்போது நடைபெறவுள்ள கூட்டுறவுத் தேர்தலில் முதல் முறையாக பொதுத் தேர்தலில் உள்ளது போல் நன்னடத்தை விதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவு தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் அலுவலர்களாக கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் முதுநிலை ஆய்வாளர், கூட்டுறவு சார்பதிவாளர் அளவிலும், கல்வித் துறையில் ஆசிரியர்கள் மற்றும் இதர துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் முதுநிலை ஆய்வாளருக்கு சமமான பதவியில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மட்டும் நியமிக்கப்பட வேண்டும்.
தேர்தல் அலுவலர்களாக கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். கூட்டுறவுத் தேர்தலுக்கான படிவங்கள் அனைத்தும் கூட்டுறவு அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் தேர்தல் குறித்து பணியாளர்களுக்கு வழங்கப்படும் தேர்தல் பயிற்சி வகுப்புகளை முறையாக தெரிந்துக்கொள்ள வேண்டும். தேர்தலில் போட்டியிடுபவர் ஓராண்டுற்கு மேலாக சிறை தண்டனை பெற்றிருந்தால் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக்கூடாது. இதுபோன்ற அனைத்து விதமான தேர்தல் விதிமுறைகளை அலுவலர்கள் தெரிந்துக்கொண்டு சிறப்பாக எந்த பிரச்சனையின்றி கூட்டறவு சங்க தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கூட்டுறவுத் தேர்தலுக்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன், (ஓய்வு) தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன், (ஓய்வு) 2018 ஆம் ஆண்டு கூட்டுறவு தேர்தல் கையேடு வெளியிட அதனை கலெக்டர் சி.அ.ராமன், பெற்றுக்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன், கூட்டுறவு பதிவாளர் செயலர் ஜான்பீட்டர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ராஜ்குமார், மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை, இணை இயக்குநர் (வேளாண்மை) வாசுதேவரெட்டி மற்றும் கூட்டுறவு சங்க அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.