முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கறவை மாடுகளில் ஏற்படும் பால் காய்ச்சல் நோயும் தடுப்பு முறைகளும்

புதன்கிழமை, 21 மார்ச் 2018      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

பால் காய்ச்சல் நோயனது அதிகமாகப் பால் கறக்கக்கூடிய கறவை மாடுகளில் கன்று ஈன்ற 48 மணி நேரத்திற்குள் காணப்படுகிறது. சுhதாரணமாக 5 முதல் 10 வயது உடைய மாடுகளை இந்நோய் அதிகம் தாக்குகிறது. கன்று ஈனுவதற்கு முன், கன்று ஈனும் போது அல்லது கன்று ஈன்ற சில வாரங்களில் இந்நோய் ஏற்படலாம். முதல் இரண்டு கறவையில் இந்நோய் அதிகம் தாக்குவது இல்லை. ஒரே மாட்டில் அடுத்தடுத்த ஈற்றிலும் கூட இந்நோய் தாக்க வாய்ப்புள்ளது. குறவை மாடுகளில் பால் வாதத்தினால் ஏற்படும் விளைவுகள் பெருத்த பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன.

இந்நோயிலிருந்து குணமாகும் கறவை மாடுகள் கீட்டோசிஸ் மற்றும் மடி நோயால் பாதிக்கப்படுவது உண்டு. கறவை மாடுகளில் இரண்டு கன்றுகளுக்கு இடைப்பட்ட இடைவெளி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. கனறு ஈனும் சமயத்தில் பால் வாத நோய் மாடுகளை பாதித்தால் கன்று ஈனுதலில் சிரமங்கள், தொப்புள் கொடி விழாதிருத்தல், கர்ப்பப்பையில் புண், கர்ப்பப்பை வெளித்தள்ளுதல் போன்ற பாதிப்புகளும் உண்டாகின்றன. அதனால் கறவை மாடுகள் வைத்திருப்போர் பால் காய்ச்சல் நோயைப் பற்றி அறிந்து கொண்டு இந்த நோய் வராமல் தடுக்க வேண்டிய பராமரிப்பு முறைகளையும் நோய் வந்தால் தகுந்த சிகிச்சை முறைகளையும் மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். 

பால் காய்ச்சல் உண்டாவற்கான காரணங்கள்:

இந்த நோயானது கறவை மாடுகளில் இரத்தத்தில் சுண்ணாம்புச் சத்துக் குறைவினால் ஏற்படுகிறது. மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு சுண்ணாம்புச் சத்து 10 முதல் 12 கிராம் தேவைப்படும். ஆனால் கன்று ஈன்ற மாடுகளில் கூடுதலாக 2 முதல் 3 கிராம் சுண்ணாம்புச் சத்து ஒவ்வொரு கிலோ பாலிலும் வெளியேறுகிறது. பாலின் அளவு அதிகரிக்கும் போது அதன் மூலம் இழக்கப்படும் சுண்ணாம்புச்சத்தின் அறவும் அதிகமாகிறது.

இவ்வாறு இழக்கப்படும் சுண்ணாம்புச் சத்தினை இரத்தத்தில் குறையாமல் இருக்கச் செய்ய வைட்டமின் ~டி|யும், பாராதைராய்டு என்னும் சுரப்பி சுரக்கும் ஹார்மோன் சுண்ணாம்புச் சத்தினை கறவை மாட்டின் எலும்புகளிலிருந்து கரைத்து இரத்தத்தைச் சென்றடையச் செய்கிறது. புhல் காய்ச்சலால் மாடுகள் அவதியுறும் போது பாராதைராய்டு சுரப்பியும், வைட்டமின் ~டி|யைச் சுரக்கும் நாளமில்லாச் சுரப்பியும் பாதிக்கப்படுகின்றன. இவற்றின் அளவுகள் குறைவதால் இந்த நோய் வருகிறது. எலும்புகள், குடல் முதலியவற்றால் உடல் பெறும் சுண்ணாம்புச் சத்தை விட சீம்பாலின் மூலம் இழக்கும் சுண்ணாம்புச் சத்து மிக அதிகம். ஊடலில் சுண்ணாம்புச் சத்து குறையும் போது எலும்புகளில் இருந்து கரைந்து உடலில் சேரும் சுண்ணாம்புச் சத்து ஈடு கொடுக்க முடியாத நிலையில் இந்நோய் ஏற்படுகிறது.

நோய் அறிகுறிகள்:

மாட்டின் இரத்தத்தில் சுண்ணாம்புச் சத்தின் அளவைப் பொறுத்து இந்த நோயின் அறிகுறிகளை மூன்று நிலைகளாகக் காணலாம்.

முதல் நிலை:

இது ஆரம்ப நிலையாகும். பாதிக்கப்பட்ட மாடுகள் நடுக்கத்துடன் காணப்படும். துலை மற்றும் கால் பகுதிகளில் சதைத்துடிப்பும் காணப்படும். இந்த நோய் இதய தசையையும் உடலின் மற்ற தசைகளையும் வலுவிழக்கச் செய்கிறது. தீவனம் மற்றும் தண்ணீர் உட்கொள்ளாமலும், சரியாக நடக்க இயலாமலும், நடக்கும் போது அடிக்கடி கீழே விழுதலும் காணப்படும். இந்நிலையில் மாடு தலையை அடிக்கடி ஆட்டுதலும், நாக்கை வெளியே நீட்டுதலும், பற்களைக் கடித்துக் கொள்ளுதலும் காணப்படும். தீவனம் உட்கொள்ளாது. அசையூன் வயிற்று அசைவுகள் நின்று விடும். உடல் வெப்ப நிலையில் மாற்றம் காணப்படாது. புhல் கறவை முழுவதுமாக நின்று விடும்.

இரண்டாம் நிலை:

இது பால் காய்ச்சல் நோயின் இடை நிலையாகும். இதில் மாடுகள் உட்கார்ந்தவாறு தலையை மார்பு அல்லது வயிறு மீது வைத்துத் தூங்கியவாறு இருக்கும். மூச்சுத் திணறும். நுpற்க இயலாமல் நெஞ்சைத் தரையில் அழுத்தியவாறு உடகார்ந்து விடும். மேலும் தலையை ஒரு புறமாக மடக்கி நெஞ்சுப்பகுதியில் ஒட்டியவாறும் வைத்துக் கொள்ளும். ஊடல் வெப்பநிலைக் குறைந்து காணப்படும். தீவனம் உட்கொள்ளாது. சுhணம் போடாது. வயிறு உப்புசம், கண் மற்றும் மூக்கு வறட்சி போன்றவைகளும் காணப்படும்.

மூன்றாம் நிலை:

இது பால் காய்ச்சல் நோயின் கடை நிலையாகும். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாடுகள் உட்கார முடியாமல் ஒரு புறமாக படுத்து விடும். மிகவும் தளர்ந்த நிலையில் மாடுகள் ஏறக்குறைய சுவாதீனமற்று விறைத்துப் படுத்திருக்கும். மிகவும் குறைந்த உடல் வெப்பநிலையுடன் காணப்படும். கைகளால் நாடித் துடிப்பை உணர முடியாது. இருதய துடிப்பு கேட்காது. உடலில் இரத்த ஓட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மிக நீண்ட நேரம் படுத்திருப்பதால் வயிறு உப்புசமும் காணப்படும். பால் காய்ச்சல் மாடுகளை சிகிச்சை செய்யாமல் விடும் போது நோயின் தன்மை அதிகரித்து மாடு படுத்த படுக்கையாகி செயலிழந்து இறுதியில் இறக்க நேரிடுகிறது.

சிகி;சசை முறை:

மாடுகள் பக்கவாட்டில் படுக்கும் நிலைக்கு முன்பாகவே சஜகஜச்சை அளித்தால் பால் காய்ச்சல் நோயை எளிதில் குணப்படுத்தி விடலாம். சுண்ணாம்புச் சத்து அடங்கிய மருந்தினை கால்நடை மருத்துவரின் உதவியுடன் ஊசி மூலம் இரத்தத்தில் செலுத்துவதன் மூலம் நோயைக் குணபடுத்தலாம். நோயின் ஆரம்ப அறிகுறிகள் காணும் போதே சிகிச்சை செய்வது மிக முக்கியம். சுண்ணாம்புச்சத்தை இரத்த நாளத்தில் செலுத்தும் பொழுதே பால் காய்ச்சல் நோயின் அறிகுறிகள் விடுபட்டு படுத்திருக்கும் மாடுகள் உடனடியாகக் குணமடைந்து எழுந்து நிற்பதைக் காணலாம்.

தடுப்பு முறைகள்:

பொதுவாக நினை மாடுகளை கன்று ஈனும் வரை பால் கறக்கும் பழக்கம் சில விவசாயிகளிடம் உண்டு. அதைத் தவிர்க்க வேண்டும். அதாவது கன்று ஈனுவதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பாகவே பால் கறப்பதை நிறுத்தி விட வேண்டும்.

தீவனத்தில் அதிக மாற்றங்களைத் தவிர்க்க வேண்டும். சினை மாடுகளுக்கு சிலர் சுண்ணாம்புச் சத்தை அதிகமாக ஒரு நாளைக்கு 100 கிராமுக்கு மேலாக மாட்டின் தீவனத்திலோ அல்லது தனியாகவோ கொடுப்பார்கள். அவ்வாறு கொடுக்கும் மாடுகளில் இந்நோய் அதிகமாக வருகிறது. ஆகையால் அதைத் தவிர்க்க வேண்டும். சுண்ணாம்புச் சத்து மிக அதிக அளவில் உள்ள புரதச்சத்து அதிகமுள்ள பசுந்தீவனங்களை குறைவாகக் கொடுக்க வேண்டும்.

முக்கியமாக கடைசி சினை மாதங்களில் பாஸ்பரஸ் தாது உப்பு அதிகமாக உள்ள தீவனமான அரிசித் தவிடு அதிகமாக கொடுக்க வேண்டும்.

மாடுகளை கடைசி சினை மாதங்களிலும், கன்று ஈனுவதற்கு சிறிது நாட்களுக்கு முன்பாகவும், பின்பாகவும் அதிக கவனம் செலுத்தி பார்த்துக்கொள்ள வேண்டும். பால் காய்ச்சல் நோய்க்கான ஆரம்ப அறிகுறிகளை கண்டவுடனேயே மருத்துவரிடம் காண்பித்து தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். வைட்டமின் ~டி| சத்து ஊசியை கால்நடை மருத்துவர் உதவியுடன் சினைப் பசுவிற்கு கன்று ஈனுவதற்கு முன் போடுவதன் மூலம் இந்நோய் வராமல் தவிர்க்கலாம்.

சுனைக் காலங்களில் கொடுப்பதனால் தேவையான அளவு சுண்ணாம்புச் சத்து இரத்தத்தில் நிலை நிறுத்தப்படுவதுடன் கன்று ஈன்ற பின்பு பாலில் இழக்கப்படும் இரத்ததின் சுண்ணாம்புச்; சத்தினை சீரமைக்கும் பாராதார்மோன் இயக்குநீரின் அளவும் பாதிக்கப்படாமல் அமைந்து பால்; காய்ச்சல் நோய் உண்டாவது தடுக்கப்படுகிறது.

தொடர்புக்கு : கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், பிரட்ஸ் ரோடு, சேலம்-636 001.
தொகுப்;பு : நா. ஸ்ரீ பாலாஜி, து. ஜெயந்தி மற்றும் ப.ரவி
        

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து