எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி, தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து தேனி மாவட்டம் கம்பம், சின்னமனூர் போடிநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் இறுதி கட்ட பிரச்சாரமாக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். இப்பிரச்சாரத்தின் போது தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியதாவது,
மத்தியில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்தது. ஆனால் நாட்டு மக்களுக்கு எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்பதற்காக தமிழக மக்கள் பல லட்சம் பேர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய போது பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று நான் முதலமைச்சராக இருந்த போது வேண்டுகோள் விடுத்தேன். இதனையடுத்து உடனடியாக இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ஒரே நாளில் நான்கு துறைகளிலும் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடைபெற வழிவகை செய்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு மூல காரணமாய் இருந்தவர் நரேந்திர மோடி.
மேலும் தமிழகத்தில் தாய்மார்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அம்மா செய்திருந்தார். அவர் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகளின் பணி சுமையை குறைப்பதற்காக இலவச மிக்சி கிரைண்டர் மின் விசிறி போன்ற அனைத்து பொருட்களும் தமிழக அரசால் 5 ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அம்மா இருந்த போது பொங்கலுக்கு அனைவரும் சர்க்கரை பொங்கல் வைத்து சாப்பிடும் விதமாக பச்சரிசி வெல்லம் போன்றவை வழங்கப்பட்டது தற்போது அவற்றுடன் சேர்த்து மக்கள் அனைவரும் சந்தோசமாக பொங்கல் திருவிழாவை கொண்டாட வேண்டும் என்பதற்காக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அம்மா இருந்த பொழுது கொண்டு வந்த எந்த திட்டத்தையும் குறைக்கவில்லை, விரிவுபடுத்தப்பட்டுதான் வருகிறது. மேலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் மக்களுக்கு தமிழக அரசால் 2000 ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு கொடுக்க முன் வருவதற்குள் தி.மு.க.வினர் அதனை தடுக்கும் விதமாக நீதிமன்றம் சென்று நிறுத்தி விட்டனர். உறுதியாக தேர்தல் முடிந்தவுடன் நீதிமன்றத்தில் இருக்கும் தடையை விலக்கி ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும். மேலும் நாங்கள் சரிவர வேலை செய்கிறோமா என்று மேலிருந்து எங்களை அம்மா கண்காணித்துக் கொண்டிருக்கிறார்.
அதனால் நாங்கள் பயந்து கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதை ஸ்டாலின் இந்தத் தேர்தலுடன் அ.தி.மு.க. காணாமல் போய் விடும் என்று பேசி வருகிறார். 1972-ல் எம்ஜிஆர் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு வந்த வேதனைகள் சோதனைகள் அனைத்தையும் தாங்கி இன்று ஒன்றரை கோடிக்கு மேல் தூய தொண்டர்களை கொண்ட இயக்கமாக உள்ளது. எந்த ஒரு கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக அம்மா உருவாக்கி வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி ஸ்டாலின் கூறுகிறார், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தமிழ்நாட்டையே தீ வைத்துக் கொளுத்தி விடுவார்கள் என்கிறார். அதற்கு நாங்கள் என்ன தீப்பந்தத்துடனா அலைந்து கொண்டிருக்கிறோம். மாமன், மச்சான் சண்டையில் மதுரையில் பத்திரிகை அலுவலகத்தை தீ வைத்துக் கொளுத்தி 3 பேர் இறந்ததற்கு தி.மு.க. வே காரணம். அதற்கு தீர்ப்பு காலம் தாழ்த்தி வந்தாலும் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர். இன்றைக்கும் ஸ்டாலின் எதிர்க்கட்சி தான். ஆனால் வன்முறையை கைவிடவில்லை.
சென்னையில் பிரியாணி சாப்பிட்டு விட்டு அந்தக் கட்சியினர் பணம் கொடுப்பதில்லை. தற்போது பணம் கொடுத்தால் மட்டும் தான் அவர்களை உள்ளே நுழைய விடும் அவலம் அந்த கட்சியினருக்கு தற்போது நிகழ்ந்து வருகிறது. எதிர்க்கட்சியில் இருக்கும் போதே இந்த ஒரு நிலை என்றால் ஆளுங்கட்சியாக அவர்கள் வந்தால் தமிழ்நாட்டை என்ன பாடு படுத்துவார்கள். மேலும் இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அவர்களுக்கு நோன்புக் கஞ்சிக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது. மேலும் மூவாயிரத்திலிருந்து 4000 பேர் வரை ஹஜ் பயணத்திற்கு மாநில நிதியிலிருந்து மானியம் வழங்கப்படுகிறது. கிறிஸ்துவ பெருமக்கள் ஜெருசலம் செல்வதற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இப்படி அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்ல பல திட்டங்களை வழங்கி வருவது இந்த அரசுதான். ஆகவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ரவீந்திரநாத் குமாருக்கு தங்களது வாக்குகளை வழங்க வேண்டும். உங்களுக்காக அவர் உழைத்திடுவார். இந்த இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், மற்றும் நகர செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 6 hours ago |
ஆனியன்ப்ரை4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
சென்னைக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: குஜராத் கேப்படனுக்கு அபராதம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக
-
அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
11 May 2024புதுடெல்லி : தெற்கு டெல்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொள்ளும் முன் அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.
-
டோனியுடன்... ரஷித் கருத்து
11 May 2024ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
அதிக தனிநபர் சதங்கள்: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
11 May 2024மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரில் 13 தனிநபர் சதங்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதிரடியான ஆட்டம்...
-
ரிஷப் பண்ட் விளையாட தடை
11 May 2024பெங்களுரூ : பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
சி.எஸ்.கே.வுக்கு எதிரான வெற்றி: புள்ளிப்பட்டியலில் குஜராத் முன்னேற்றம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சென்னை அணி? - ராஜஸ்தானை இன்று எதிர்கொள்கிறது
11 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. இன்று 7-வது வெற்றியை பெறுமா?
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.