முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை : புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசு தேவன் நம்பூதிரி திறந்து வைத்தார். ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 9- ந் தேதி திறக்கப்பட்டது. 11- ந்தேதி திருவோண தினத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோவில் நடை 13- ந்தேதி இரவு அடைக்கப்பட்டது.

இதையடுத்து புரட்டாசி மாத பூஜைக்காக கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசு தேவன் நம்பூதிரி மாலை 5 மணிக்கு நடையை திறந்து வைத்தார். இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உஷ பூஜை, மாலை 6 மணிக்கு தீபாராதனை, புஷ்பாபிஷேகம் போன்றவை நடைபெற்றன.. 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் 21- ந் தேதி இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து