முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூதாட்ட வழக்கில் தென்ஆப்பிரிக்க வீரருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

ஜோகன்ஸ்பர்க் : சூதாட்ட வழக்கில் சிக்கிய தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குலாம் போடி. 46 வயதான அவர் 2 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இந்தியாவில் பிறந்தவரான குலாம் போடி மீது மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு கூறப்பட்டது. 2015-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்த உள்ளூர் போட்டியின் போது அவர் மேட்ச் பிக்சிங் எனும் சூதாட்டத்தில் சிக்கினார். இதற்காக குலாம் போடிக்கு 20 வருடம் தடை விதித்து தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. குலாம்போடி மீதான சூதாட்ட வழக்கு பிரிட்டோரியாவில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் நடந்தது. அவர் மீது 8 விதமான ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் குலாம்போடிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து