முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேரு நினைவிடத்தில் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி : ஜவகர்லால் நேருவின் 130-வது பிறந்தநாளான நேற்று அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.  

குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 130-வது பிறந்தநாள்  குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டது. நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

இதேபோல் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நேரு நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

‘நமது முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்’ என பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.  

டெல்லியில், குழந்தைகளுக்கான சிறப்பு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்று உற்சாகமாக ஓடினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து