எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம் : சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க நேற்று முன்தினம் வரை 7 லட்சத்து 71 ஆயிரத்து 288 பக்தர்கள் வந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கேரளாவில் உலக பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை, மகரவிளக்கு திருவிழாக்களின்போது கோவிலுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். கடந்த ஆண்டு சபரிமலையில் இளம்பெண்களை தரிசனத்திற்கு அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்ததால் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இந்த ஆண்டு சபரிமலையில் போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் மண்டல பூஜைக்கு நடை திறந்த முதல் நாளே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முதல் 3 நாட்களிலேயே கோவிலின் வருமானமும் 2 மடங்காக உயர்ந்தது. சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க நேற்று முன்தினம் வரை 7 லட்சத்து 71 ஆயிரத்து 288 பக்தர்கள் வந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும் 52 ஆயிரத்து 60 பக்தர்கள் சபரிமலை வந்தனர். இதில் புல்மேடு வழியாக வந்தவர்கள் மட்டும் 3 ஆயிரத்து 823 பேர் ஆவர்.சபரிமலையில் வரிசையில் நிற்காமல் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2 லட்சத்து 96 ஆயிரத்து 113 பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு ஆன்லைனில் முன்பதிவு செய்து சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. சபரிமலை வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக அரவணை, அப்பம் வழங்கப்படும். மண்டல பூஜைக்கு நடை திறந்த நாள் முதல் இதுவரை 20 லட்சம் அரவணை டின்கள் விற்பனை ஆகி உள்ளன. இதனை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறியதாவது:-
பக்தர்கள் தேவைக்கு அரவணை விநியோகிக்க கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அரவணை விற்பனை நிலையங்களில் 15 லட்சம் டின் அரவணை இருப்பில் உள்ளது. அரவணை தயாரிப்பு மையத்தில் தினமும் 2 லட்சம் அரவணை டின்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பிரசாதம் வழங்கப்படும் என்றனர். சபரிமலையில் இப்போது போராட்டங்கள் இல்லை என்றாலும் போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பும் கடுமையாக உள்ளது. இது குறித்து சபரிமலை போலீஸ் சிறப்பு அதிகாரி ஸ்ரீனிவாஸ் கூறியதாவது:- சபரிமலையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தினமும் 1,100 போலீசார் பாதுகாப்பு பணி செய்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
சபரிமலையில் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. சரங்குத்தி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து பக்தர்களை ஒழுங்குப்படுத்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


