எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தி.மு.க. அஞ்சுகிறது. பொதுமக்களை சந்திக்க எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அஞ்சுகிறார் என்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தேர்தல் தேதி அறிவிப்பு
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டமாக 27 மாவட்டங்களில் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இந்த தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று துவங்குகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார்.
முதல்வர் பேட்டி
அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் யாரால் தள்ளிப் போகிறது என்பதை மு.க. ஸ்டாலின் தற்போது தெளிவுபடுத்தி விட்டார். ஒவ்வொரு முறையும் ஏதாவது குற்றம், குறை சொல்லி அவர் இந்த தேர்தலை தள்ளிப் போட பார்க்கிறார். கடந்த மே மாதமே வார்டு வரையறை செய்யும் பணி முடிக்கப்பட்டு விட்டது. இதில் ஆட்சேபனை இருந்தால் கூறலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 7 மண்டலங்களில் கிட்டத்தட்ட 19 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. அதன் பிறகு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு அதனடிப்படையில் வார்டு வரையறையும் செய்யப்பட்டது. தற்போது சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் அடிப்படையில்தான் உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், முதலில் இதை வரவேற்று விட்டு தற்போது மீண்டும் கோர்ட்டுக்கு போகிறார். எந்த வார்டில் பிரச்சினை, இட ஒதுக்கீட்டில் என்ன பிரச்சினை என்று கூறாமல் நீதிமன்றம் செல்கிறார்.
ஸ்டாலினின் நோக்கம்
உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போட வேண்டும் என்பதே இவரது நோக்கமாக உள்ளது. இதுவரை அ.தி.மு.க. மீது பழி போட்டு வந்தார். உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. அரசு தள்ளிப் போடுவதாக குற்றம் சாட்டி வந்தார். ஆனால் இப்போது உச்சநீதிமன்றமே தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளது. 27 மாவட்டங்களில் நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. அதனடிப்படையில் தான் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது.
மக்களை சந்திக்க அஞ்சுகிறார்
ஆனால் மு.க. ஸ்டாலின் 2016-ல் எப்படி நீதிமன்றத்தை நாடினாரோ, அதே போல் இப்போதும் நீதிமன்றத்தை நாடுகிறார். இப்படி குற்றம் சொல்லி சொல்லியே தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அஞ்சுகிறது. மீதமுள்ள 9 மாவட்டங்களில் வார்டு வரையறை செய்யப்பட்ட பிறகுதான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. ஆனால் இதை ஸ்டாலின் வரவேற்று விட்டு மீண்டும் கோர்ட்டுக்கு போகிறார். இந்த தேர்தல் மூலம் மக்களை சந்திக்கவே அவர் அஞ்சுகிறார். தேர்தலை சந்திக்க தில் இருக்கா? என்று அவர் அடிக்கடி கேட்பார். இப்போது நாங்கள் கேட்கிறோம். தேர்தலை சந்திக்க ஏன் பயப்படுகிறீர்கள். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
15 நாளில் சரியாகும்
வெங்காய விலை உயர்வு பற்றி கேட்ட போது, மழை கனமாக பெய்வதால் வெங்காய விலை உயர்ந்துள்ளது. இன்னும் 15 நாளில் எல்லாம் சரியாகி விடும் என்று பதிலளித்தார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், கோவையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தோம். சாலைகளை சீரமைத்துள்ளோம். இப்படி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆனால் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டு விஷமத்தனமாக பேசி மக்களை குழப்ப பார்க்கிறார். அவரது முயற்சி ஒருபோதும் பலிக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.