எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காத்மாண்டு : தெற்காசிய விளையாட்டில் இந்தியா 100 தங்கப் பதக்கங்களை வேட்டையாடி உள்ளது.
நேபாளத்தில் நடைபெற்று வரும் இந்த விளையாட்டில் 5-வது நாளான நேற்று முன்தினம் மட்டும் 29 தங்கம் உட்பட 49 பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் வென்றனர். நீச்சலில் இந்தியாவுக்கு 7 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஹரி நட்ராஜ் (100 மீட்டர் பேக்ஸ்டிரோக்), ரிச்சா மிஸ்ரா (800 மீட்டர் பிரீஸ்டைல்), சிவா (400 மீட்டர் தனிநபர் மெட்லே), மானா படேல் (100 மீட்டர் பேக்ஸ்டிரோக்), சாஹத் அரோரா (50 மீட்டர் பேக்ஸ்டிரோக்), லிகித் (50 மீட்டர் பிரீஸ்ட் ஸ்டிரோக்), ருஜுதா பாத் (50 மீட்டர் பிரீஸ்டைல்) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.
ஜெயவீனா (50 மீட்டர் பிரீஸ்ட்ஸ்டிரோக்) வெள்ளிப் பதக்கமும், ரிதிமான வீரேந்திர குமார் (100 மீட்டர் பேக் ஸ்டிரோக்) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். நீச்சலில் மட்டும் இதுவரை இந்தியாவுக்கு 30 பதக்கங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு 4 தங்கப் பதக்கங்கள் கிடைத்தது. ஆடவருக்கான 97 கிலோ எடைப் பிரிவு பிரீஸ்டைலில் சத்யவர்த் கதியான், 125 கிலோ எடைப் பிரிவு பிரீஸ்டைலில் சுமித் மாலிக் ஆகியோரும் மகளிருக்கான 76 கிலோ எடைப் பிரிவில் குர்ஷன்பிரீத் கவுர், 57 கிலோ எடைப் பிரிவில் சரிதா மோர் ஆகியோரும் தங்கப் பதக்கம் வென்றனர். துப்பாக்கி சுடுதலில் இந்தியா 3 தங்கம் கைப்பற்றியது. ஆடவருக்கான 25 மீட்டர் ராப்பிடு பையர் பிஸ்டலில் அனிஷ் பன்வாலா தங்கம் வென்றார். இதே பிரிவில் அனிஷ் பன்வாலா, பாபேஷ் சேகாவத், ஆதார்ஷ் சிங் ஆகியோரை உள்ளிடக்கிய இந் திய அணி தங்கப் பதக்கம் வென்றது. 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் மெஹுலி கோஷ், யாஷ் வர்தன் ஜோடி தங்கம் வென்று அசத்தியது.
பளு தூக்குதலில் இந்தியாவுக்கு மேலும் இரு தங்கப் பதக்கம் கிடைத்தது. மகளிருக்கான 87 கிலோ எடைப் பிரிவில் அனுராதா பவுன்ராஜ் ஒட்டுமொத்தமாக 200 கிலோ எடையை (90+110) தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். 27 வயதான பவுன்ராஜ் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அவர் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
81 கிலோ எடைப் பிரிவில் ஷர்ஸ்தி சிங் 190 கிலோ எடையை (82+108) தூக்கி தங்கம் வென்றார். தடகளத்தில் கடைசி நாளான நேற்று முன்தினம் இந்தியாவுக்கு மேலும் 8 பதக்கங்கள் கிடைத்தது. மகளிருக்கான ஈட்டி எறிதலில் குமாரி ஷர்மிளா (53.64 மீட்டர்) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இதேபோன்று மகளிருக்கான 800 மீட்டர் ஆட்டத்தில் லில்லி தாஸ் (2:08.97) வெண்கலப் பதக்கம் பெற்றார். ஆடவருக்கான ஈட்டி எறிதலில் சிவ்பால் சிங் (84.16 ) வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஜீவன், சந்தோஷ் குமார், அங்ரெஜ் சிங், ஜபிர் மதரி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 3:08.21 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது.
ஆடவருக்கான மராத்தானில் ரஷ்பால் சிங் (2:21:57) வெள்ளிப் பதக்கமும், ஷெர் சிங் (2:22:07) வெண்கலப் பதக்கம் பெற்றனர். அதேவேளையில் மகளிருக்கான மராத்தானில் ஜோதி கவாதே (2:52:44) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் மொகமது அஃப்ஸல் (1:51.25) வெள்ளிப் பதக்கம் வென்றார். தடகளத்தில் மட்டும் ஓட்டுமொத்தமாக இந்தியா 12 தங்கம், 20 வெள்ளி, 15 வெண்கலம் என 47 பதக்கம் கைப்பற்றியது.
மகளிருக்கான கால்பந்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது. இந்திய அணி சார்பில் 18-வது நிமிடத்தில் பாலா தேவி கோல் அடித்து அசத்தினார். இந்திய அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இந்த வெற்றியால் ரவுண்ட் ராபின் சுற்றில் இந்திய அணி முதலிடம் பிடித்தது. இன்று நடை பெறும் தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் நேபாளத்துடன் மோதுகிறது.
6-வது நாளின் முடிவில் இந்தியா 110 தங்கம், 69 வெள்ளி, 35 வெண் கலம் என 214 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியது. நேபாளம் 43 தங்கம், 34 வெள்ளி, 65 வெண்கலம் என 142 பதக்கங்களுடன் 2-வது இடம் வகிக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.