முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகாரின் மீது வழக்குப்பதியாமல் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் ஐகோர்ட் மதுரைக் கிளை கருத்து

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2025      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

Source: provided

மதுரை: புகாரை வாங்கி வைத்துக் கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம் என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. மேலும், சில வழக்குகளில் அவ்வாறு வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பு விசாரணை நடத்த வேண்டும் என்றால் டி.எஸ்.பி.யிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

குற்றம் வெளிப்படையாக தெரிந்தால் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ‘காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம்’ - ஐகோர்ட் மதுரைக் கிளை கருத்து

மதுரை தள்ளாகுளம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் ஐகோர்ட் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தான் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்திய பிறகும் கூடுதலாக வட்டி கேட்டு துன்புறுத்துவதாகவும், தனது புகார் குறித்து தல்லாகுளம் போலீசார் உரிய வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், உரிய ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகும், போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தால், அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தபிறகே விசாரணை நடத்த வேண்டும் எனவும், புகாரை வாங்கி வைத்துக் கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம் என்று தெரிவித்தனர்.

புகார் பெறப்பட்ட பிறகு, குற்றம் வெளிப்படையாக தெரிந்தால் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், சில வழக்குகளில் அவ்வாறு வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பு விசாரணை நடத்த வேண்டும் என்றால் டி.எஸ்.பி.யிடம் அனுமதி வாங்கி, அதன் பிறகு விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து