முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - முதல்வர் எடப்பாடிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பண்டிகையை தனது சொந்த ஊருக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் இணைந்து கொண்டாடினார். இதற்கிடையே அவர் சிலுவம்பாளையத்தில் தொலைகாட்சி ஒன்றுக்கு  பிரத்யேக பேட்டி அளித்தார். இந்த பேட்டியின் போது வயலில் இறங்கி வேலை செய்ததோடு, விவசாயம் தொடர்பான தனது அனுபவங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்றது.

இது குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. தனது ஆதாரமான விவசாயத்தை அவர் மறக்காமல் இருப்பது பாராட்டுக்குரியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு ஊக்கம் தருகிறார். விவசாயத்தை லாபகரமானதாக மாற்றுவதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்  என்று அதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து