எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் மானியம் இல்லா சிலிண்டரின் விலை ரூ.65 வரை குறைக்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சமையல் கியாஸ் சிலிண்டர்களை மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது. அதன்படி ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு தலா 12 கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதற்கான மானியம் நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மேல், சிலிண்டர்கள் தேவைப்பட்டால் சந்தை விலையில் வாங்கிக் கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி, வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி 14.2 கிலோ எடையுடைய மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 61.5 முதல் ரூ. 65 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து 2-வது மாதமாக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட விலையின் படி, டெல்லியில் ரூ. 805-க்கு விற்பனையாகி வரும் சிலிண்டரின் விலை, ஏப்ரல் 1 முதல் ரூ. 744-க்கு விற்பனையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் ரூ. 826-ல் இருந்து ரூ.761.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


