முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தான்குளம் சம்பவம்: தமிழக முதல்வரை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்

வியாழக்கிழமை, 16 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 10 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ராஜாராமன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.   இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் முதல்வரை விசாரிக்கும்படி உத்தரவிட முடியாது எனக் கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து