முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரக்‌ஷா பந்தன் பண்டிகை: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து

திங்கட்கிழமை, 3 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ரக்‌ஷா பந்தன் பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  இந்தியாவின் மிகப் பழமையான பண்டிகைகளில் ரக்‌ஷா பந்தனும் ஒன்று ஆகும்.  சகோதரிகள், சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி, சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‏ஷா பந்தன் பண்டிகை திருநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.  வருகிறார்கள். 

இந்நிலையில், ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ரக்‌ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

மேலும் அமிர்தானந்தமாயி ஜி, உங்கள் சிறப்பு ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்களால் நான் மிகவும் தாழ்மையுடன் இருக்கிறேன். நமது பெரிய தேசத்திற்கு உழைப்பது எனது பாக்கியம். உங்களிடமிருந்தும், இந்தியாவின் நாரி சக்தியிலிருந்தும் ஆசீர்வாதம் எனக்கு மிகுந்த பலத்தைத் தருகிறது. இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கும் அவை மிக முக்கியமானவை என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

இந்த பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், பெண்களின் மரியாதைக்கும், கண்ணியத்துக்கும் அனைவரும் ஆதரவாய் நிற்க வேண்டும். இதனால் அவர்கள் நாட்டுக்கும், சமூகத்துக்கும் தங்கள் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும் என கூறி உள்ளார். 

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது வாழ்த்து செய்தியில், இந்த பண்டிகை அன்பு மற்றும் பாசத்தினால் சகோதர, சகோதரிகளை ஒன்றிணைக்க மீண்டும் உறுதிப்படுத்துகிறது என கூறி உள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து