முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையில் இருந்து 17-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2020      தமிழகம்

சென்னை : மேட்டூர் அணையில் இருந்து வரும் 17-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனப்            பகுதியில் உள்ள நிலங்களுக்கு பாசனத்திற்கு  மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு வேண்டுகோள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று,  மேட்டூர் அணையின் கிழக்குக்கரை கால்வாய் பாசனப் பகுதியில் 27,000 ஏக்கர் நிலங்களும், மேற்குக் கரை கால்வாய் பாசனப் பகுதியில் 18,000 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு மேட்டூர் அணையிலிருந்து 17.8.2020 முதல் 31.12.2020 வரை  தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கரும்,   ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் மற்றும்  நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்  என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை  மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து