எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் முதல்வரின் வருகை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். மாநில அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றி ஆலோசனை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அம்மாவின் நல்லாசியுடன் சரித்திரம் போற்றும் சாதனை படைக்கும் வகையில் எளிய முதல்வராய், விண்ணை முட்டும் சாதனை படைத்திட்டு, எட்டரை கோடி மக்கள் நலனே, தன் நலன் என்று சாதனை படைத்திட்ட சாதனை நாயகன், தன் அளப்பறியா உழைப்பால் உலகமே அச்சுறுத்தி கொண்டிருக்கும் இந்த கொடிய கொரோனா வைரஸ் நோயை கட்டுக்குள் கொண்டு வந்து இந்தியாவிற்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்று பாரத பிரதமர் மூலம் பாராட்டைப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் முதல்வர் எடப்பாடியார், இந்த சாதனை திட்டங்களுக்கு துணையாக நின்று துணை முதல்வர் ஓ.பி.எஸ். திகழ்ந்து வருகிறார் என்பதை மாநில அம்மா பேரவை, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் பெருமையுடன் சுட்டிகாட்டிகிறது.
இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் லட்சிய முழக்கங்களை தாங்கள் சுவாசிக்கும் மூச்சாக நினைத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் முதல்வரும், துணை முதல்வரும் செயலாற்றி வருவதை இந்த நாடு நன்கு அறியும் தென்மாவட்ட மக்கள் நலனை கருத்தில் கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் உருவாக்கித் தந்தது மட்டுமல்லாது, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மருத்துவ கல்லூரியை உருவாக்கி தந்தும், மதுரை மாநகர் பகுதிக்கு 1,200 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணியினை தந்திட்டது மட்டுமல்லாது, மதுரை மாவட்டத்திற்கு 30 ஆண்டு கால வளர்ச்சி திட்டங்களையெல்லாம் மூன்றே ஆண்டுகளில் வளர்ச்சித் திட்டங்களை தந்திட்டுள்ளார் நீர் மேலாண்மையில் ஒரு புரட்சியை உருவாக்கும் வகையில் குடிமராமத்து திட்டம் செய்து அதன் மூலம் தமிழகத்தின் நிலத்தடி நீரை உயர் செய்து வாழும கரிகால சோழனாக முதல்வர் திகழ்ந்து வருகிறார்
தொடர்ந்து தென்மாவட்ட மக்களின்,வளர்ச்சிக்காக கிள்ளி கொடுத்தால் போதாது என்று அள்ளி அள்ளி வழங்கி வரும் முதல்வர் இரண்டு நாள் பயணமாக தென்மாவட்ட மக்களை நேரில் சந்திக்கிறார். 29-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணி நடவடிக்கை ஆய்வு கூட்டங்களை மேற்கொண்டு மக்களுக்கு ஆறுதல் கூறி பல்வேறு விழிப்புணர்வு மேற்கொள்கிறார் முதல்வர்.
அதனை தொடர்ந்து முதல்வரும், துணை முதல்வரும் மதுரை, மாவட்டத்திற்கு வருகை தந்து பசும்பொன் தேவர் திருமகனார் குருபூஜையில் பங்கேற்க வருகின்ற 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்று மரியாதை செலுத்துகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தென் மாவட்ட மக்களின் நன்றியை உரிதாக்கும் வகையிலும், இந்தியாவிலேயே தமிழகத்திற்கு அதிக முதலீட்டை ஈர்த்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாகி தந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பாரதப் பிரதமர் மூலம் பாராட்டைப் பெற்று அதன் மூலம் தமிழகத்திற்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், மாநில அம்மா பேரவையின் சார்பிலும்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சாதனைத் திட்டங்களை முன்னிறுத்தி வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி வாகை சூடிடும் என்று எதிர்க்கட்சிகளே புறமுதுகிட்டு ஓடிடும் வகையில் வகையில் மாபெரும் நன்றி தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது,
தமிழகம் ஒரு மணி நேர மழைக்கே தள்ளாடுகிறது என்று நடிகர் கமல் கருத்து கூறியுள்ளார். வல்லரசு நாடுகள் கூட வெள்ளத்தில் தவித்து வருகிறது. தமிழக முதலமைச்சர் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள முன் கூட்டியே ஆலோசனை கூட்டத்தை நடத்தி அதில் வெள்ளம் வரும் முன், வெள்ளம் வரும்போதும் , வெள்ளம் நீர் வடிந்த பின்பு என்று மூன்று நிலைகளைப் பிரித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார். மேலும் நீர் தேங்கும் பகுதிகளில் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காணொலி முலம் அறிக்கை வெளியிடுவதை விட களத்தில் வந்து பார்க்கவேண்டும். அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார். தற்போதைய ஆட்சியில் நீர்நிலைகள் மிகச்சிறப்பாக தூர்வாரப்பட்டு உள்ளன. எதிரிகள் எல்லாம் குட்டையை குழப்பி மீன் பிடிக்கலாம் என்பது போல வடகிழக்குப் பருவ மழையிலும் மீன் பிடிக்கலாம் என நினைக்கிறார்கள்.
தேர்தல் காலம் என்பதால் அரசை எப்படியாவது எந்த வகையிலாவது குறை சொல்ல வேண்டும் என குறை கூறுகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஆளுநரிடம் இருந்து நல்ல பதில் வரும் என காத்திருக்கிறோம்.
இந்த விவகாரத்தில் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடுமோ என்ற அச்சத்தில் எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றனர். எந்த வேலையும் செய்யாமல் பங்களிப்பில் எங்களுக்கும் உள்ளது என்று தி.மு.க. செய்து வருகின்றனர். பெற்ற பிள்ளைக்கு தான் பெயர் வைக்க முடியும். பெறாத பிள்ளைக்கு எப்படி பெயர் வைக்க முடியும். அப்படித்தான் தி.மு.க.வின் நிலைப்பாடாகும்
அதிமுக அரசு மீது மாணவர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. டி.ஜி.பி. விவகாரத்தில் நிர்வாக வசதிக்காக எடுக்கப்படும் காரணங்களை விமர்சனம் செய்யக்கூடாது. வாரிசு என்ற அடையாள அட்டையை கொண்டு அ.தி.மு.க.வில் பதவி தருவது கிடையாது.
அதிகமான இளைஞர்களை சட்டப்பேரவையில் கொண்டது அ.தி.மு.க. மட்டுமே, இளைஞர்களுக்கு அட்சய பாத்திரம் போல் அள்ளி அள்ளி வாய்ப்புகளை தருகிற ஒரே இயக்கமாக உள்ளது. அம்மாவிற்கு பிறகு அ.தி.மு.க. எஃகு கோட்டையாக உள்ளது. கட்சியில் கருத்து வேறுபாடு இல்லை. நடிகர் விஜய் எல்லாம் மாவட்ட நிர்வாகிகளையும் சந்திக்க உரிமையுள்ளது. அவர் இயக்கம் சார்ந்த நிர்வாகிகளை சந்திப்பது விவாதிப்பதற்கு உரியது அல்ல,
நடிகர் விஜய் நிர்வாகிகளை சந்திப்பதில் அதைத் தாண்டி யோசிப்பதற்கு ஒன்றுமில்லை, பத்தாண்டு காலமாக கோட்டை பக்கம் வராமல் அதிகார பசியோடு தி.மு.க.வினர் உள்ளனர் எனவும் திமுகவின் காட்டு தர்பார் குடும்ப அதிகார மையம் அதிகார குறுக்கீடு அதிகார துஷ்பிரயோகம் நில அபகரிப்பு சட்டம் ஒழுங்கு சீரழிவு மின்தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.
தி.மு.க. ஆட்சியின் அவலங்கள் மக்கள் மனதில் பசுமையாக உள்ளது. வருகின்ற 29 மற்றும் 30 தேதிகளில் தென் தமிழகத்தில் தமிழக முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னுக்கு வருகை தர உள்ளார் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.