எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : நானும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வேன். நிச்சயமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கொரோனா தடுப்பு முன்களப்பணியில் ஈடுபட்டுள்ள 12 ஆயிரம் பேரை நிரந்தரம் செய்ய அரசு பரிசீலிக்கும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முயற்சி இன்று வெற்றி பெற்றுள்ளது. அவருக்கு தமிழ்நாடு மக்களின் சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவக் கூடிய ஒரு தொற்றுநோய். இதனால் பலர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள், லட்சக்கணக்கானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றார்கள். இதற்கு இதுவரை சரியான மருந்து கண்டுபிடிக்காமல் இருந்து வந்த சூழ்நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் விடாமுயற்சி காரணமாக கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அதை இன்றைய தினம் இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் அர்ப்பணித்து இருக்கிறார். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றுகின்ற மருத்துவ முன்களப் பணியாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்பதற்காக, முதற்கட்டமாக, அவர்களுக்கு இந்தத் தடுப்பூசியை போடும் நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தில், மதுரையில் இந்தத் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, முதற்கட்டமாக நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் இந்தத் தடுப்பூசி போடப்படும்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி இரண்டு முறை போடப்படும். இந்தத் தடுப்பூசி முதல் முறை போடப்பட்டு 28 நாட்கள் கழித்து மீண்டும் இரண்டாவது முறை போடப்படும். இரண்டாவது முறை தடுப்பூசி போடப்பட்ட பின் 42 நாட்கள் அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதன் பிறகு இந்த நோய்த் தாக்குதலிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை 166 முகாம்களில் இந்தத் தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, எஸ்.ஆர்.எம். மருத்துவமனை என 226 இடங்களில் முதற்கட்டமாக ஒத்திகை செய்யப்பட்டு, தற்போது அதனை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளோம். இதை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக நாம் பார்க்கின்றோம்.
இது உயிர் பிரச்சனை, இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியுமா? முடியாதா? என்றிருந்த ஒரு சூழ்நிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, விடாமுயற்சியாக, இந்தியாவில் வாழ்கின்ற மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும், அவர்கள் இந்தத் தொற்றிலிருந்து காப்பாற்றப்பட வேண்டுமென்று கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்துள்ளதற்கு அவருக்கு மீண்டும் ஒரு முறை பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி:- சென்னையில் அரசு மருத்துவமனைக்கு ஏறத்தாழ ஆறாயிரம் தடுப்பூசிதான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பல்லோ மருத்துவமனைக்கு…
பதில்:- முதற்கட்டமாக, தமிழகத்திற்கு 5,36,500 கோவிஷீல்டும், 20,000 கோவாக்ஷின் என மொத்தம் 5,56,500 எண்ணிக்கையில் தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகளில் பல தனியார் மருத்துவமனைகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இது முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. இதில் அரசு, தனியார் என்று பாகுபாடு பார்க்கக் கூடாது.
கேள்வி:- நீங்கள் தடுப்பூசி எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:- நானும் போட்டு கொள்வேன். நீங்களும் போட்டுக் கொள்ள வேண்டும். நிச்சயமாக அனைவரும் எடுக்க வேண்டும். இந்திய நாட்டிலிருக்கின்ற அனைத்து மக்களையும் காப்பாற்ற வேண்டுமென்பதற்காகத்தான் இந்தத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கின்றார்கள். கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எளிதாக தொற்று ஏற்பட்டுவிடுமென்பதால், நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல், அரசு மற்றுத் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் முதற்கட்டமாக இந்தத் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
கேள்வி:- நீங்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு சென்று வந்துள்ளீர்கள். ஆனால், ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் மீதுள்ள வழக்குகளை வாபஸ் பெற…
பதில்:- இது ஒரு நல்ல நாள், வேறு கேள்விகள் கேட்டு இதனை திசை திருப்ப வேண்டாம். இந்த நாடே, ஏன்? இந்த உலகமே கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுமா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்து, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், அதிலும், இந்தியாவிலும் கண்டுபிடிக்கப்படுமென்ற சூழ்நிலை ஏற்பட்டு, அதைக் கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ஒரு நல்ல நாள். இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை. நமது குடும்பத்தில் உள்ள ஒருவர் பாதிக்கப்பட்டால் நம்முடைய மனநிலை எப்படி இருக்கும்? எனவே, இந்தியாவிலுள்ள அனைவரையும் குடும்பத்தில் உள்ளவர்களாகக் கருதித்தான் இந்தத் தடுப்பூசியைக் கண்டுபிடித்து, இன்று முதற்கட்டமாக, மருத்துவத் துறையில் பணிபுரிகின்ற முன்களப் பணியாளர்களுக்கு போடப்படுகிறது.
கேள்வி:- நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா? இல்லையா? என்பதற்கு என்ன அளவுகோல் உள்ளது?
பதில்:- முதன்முறை தடுப்பூசி போடப்பட்ட பின் 28 நாட்கள் கழித்து மீண்டும் இரண்டாவது முறையாக போடப்படும். அதன் பிறகு 42 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும். அதற்குப் பிறகு, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுமென்று ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கென, முழு விவரங்கள் அடங்கிய ‘கைடுலைன்’ புத்தகம் கொடுத்திருக்கிறார்கள். நம்முடைய மருத்துவர்களை கலந்தாலோசித்து, எனக்கு கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில்தான் நான் கருத்துக்களைக் கூறிக் கொண்டிருக்கிறேன்.
கேள்வி:- சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் மட்டும் கோவாக்சின் தற்போது பயன்பாட்டில் இல்லையென்று சொல்லியிருக்கிறார்கள். மூன்றுகட்ட பரிசோதனை முடிந்தபின்தான் பயன்படுத்தப்படுமென்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இதைக் கொண்டு வந்துள்ளீர்களே?
பதில்:- மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது, பாரதப் பிரதமர் தொடங்கி வைத்திருக்கின்றார். அதையொட்டி நாமும் தமிழகத்தில் தொடங்கி வைத்திருக்கின்றோம். மத்திய அரசாங்கம், முன்னெச்சரிக்கையாக, நீண்ட நாட்களாக ஆராய்ச்சி செய்து, பல்வேறு சோதனைகளைச் செய்து, அதையெல்லாம் சரி என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் டி.சி.ஜி.ஐ. துறையால் முழு ஆய்வு செய்யப்பட்டு, பலகட்ட சோதனைகள் நடைபெற்று முடிந்த பிறகுதான் தடுப்பூசியே வெளியிடப்பட்டது.
கேள்வி:- அரசு எவ்வளவுதான் சொன்னாலும், மக்களுக்கு இந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதிப்பு வருமென்ற பயம் இருக்கிறதே,
பதில்:- முதலில் அவ்வாறு இருக்கத்தான் செய்யும். முதன்முதலாக, இன்று அரசு மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த தலைவர் செந்தில் போட்டுக் கொண்டார். பிறகு, அகில இந்திய அளவில் இருக்கின்ற மருத்துவச் சங்கத்தின் தலைவர் போட்டுக் கொண்டார். பிறகு மருத்துவர்கள், செவிலியர்கள் போட்டுக் கொண்டார்கள். மருத்துவர்களே போடுகிறார்களென்றால், சரியாக ஆராய்ச்சி செய்துதான் இந்த மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள், இந்த ஊசி சரியாக போடப்பட்டால் நமது உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்படுமென்று கருதித்தான் செய்கிறார்கள். நாம் சாதாரண மக்கள், நோய் வந்தால் நாம் இந்த மருத்துவர்களிடம்தான் செல்கிறோம், அவர்கள்தான் நம்மை காப்பாற்றுகின்றார்கள். அப்படி நம்மை காப்பாற்றுகின்றவர்களே முன்னிருந்து, இன்று தமிழகத்தில் முதன்முதலாக அரசு மருத்துவர் சங்கத் தலைவராக உள்ள அவரே போட்டுக் கொண்டுள்ளார் என்றால், இதில் தவறு நடப்பதற்கில்லை. முதலில் கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கும், போகப் போக அது சரியாகி விடும்.
கேள்வி:- கொரோனா வைரஸ் தடுப்பு முன்களப் பணியில் ஈடுபட்டுள்ள 12 ஆயிரம் நபர்கள் நிரந்தரப்படுத்தப்படுவார்களா?
பதில்:- படிப்படியாக அவர்களை நிரந்தரம் செய்வதற்கு அரசு பரிசீலிக்கும். இது ஒரு நல்ல நாள். நீங்கள் பத்திரிகையிலும், ஊடகத்திலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டுமென்றால், அரசு அறிவித்த வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும், வெளியே சென்று வீடு திரும்பியவுடன் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இவற்றை ஒவ்வொருவரும் தவறாமல் கடைபிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தமிழகத்தில் நிலையாக தவிர்க்கலாம். தற்போது லண்டனில் மறுபடியும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று வந்து விட்டது. அங்கு நோயுற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூட படுக்கை வசதி இல்லை. எனவே, மீண்டும் நோய் வந்துவிட்டால், மிகவும் சிரமம் ஏற்படும். நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறைந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 650-க்கும் குறைவாக இருக்கிறது, இறப்பும் குறைந்திருக்கிறது.
ஆனால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் குறைந்து கொண்டிருப்பதால் நமக்கு இந்த நோய்த் தொற்று ஏற்படாது என்று யாரும் நினைக்கக் கூடாது. இது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவக்கூடிய கண்ணுக்குத் தெரியாத வைரஸ் தொற்று என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்ற கருத்தை அம்மாவின் அரசு மக்களுக்கு கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அரசு அறிவித்த வழிமுறைகளை தமிழகத்திலுள்ள பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
ஆஸ்திரேலியா அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா
23 Oct 2025அடிலெய்டு: அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றுள்ளது.
-
ஸ்ரேயாஸ்-ரோகித் வாக்குவாதம்
23 Oct 2025அடிலெய்டில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
23 Oct 2025மேட்டூர்: மேட்டூர் அணை 4-வது நாளாக உயர்ந்தது.
-
பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
23 Oct 2025சென்னை: பிரபல இசையமைப்பாளர் சபேஷ் நேற்று சென்னையில் காலமானார்.
-
ட்ரம்ப் தென்கொரியா வரவுள்ள நிலையில் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
23 Oct 2025பியாங்காங்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தென்கொரியா வரவுள்ள நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: பாகிஸ்தான் மண்ணில் வரலாறு படைத்தது தென் ஆப்பிரிக்கா..!
23 Oct 2025ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 18 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் முதல் வெற்றியை தென்
-
நிதீஷ் குமாரை ஒருபோதும் பா.ஜ.க. முதல்வராக்காது: தேஜஸ்வி யாதவ்
23 Oct 2025பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதீஷ் குமாருக்கு அநீதி இழைக்கப்படுகிறது, ஒருபோதும் பா.ஜ.க. நிதீஷ் குமாரை முதல்வராக்கப்போவதில்லை என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்
-
விராட் கோலி டக் அவுட்
23 Oct 2025ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
-
1,000 ரன்களை கடந்த இந்தியர்: ஆஸ்திரேலிய மண்ணில் பல சாதனைகள் படைத்த ரோகித்
23 Oct 2025அடிலெய்டு: ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டியில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2025.
24 Oct 2025 -
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
24 Oct 2025சென்னை, முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன்? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன் என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
-
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை?
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் விவரத்தை தெரித்
-
வருகிற 30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்கிறார் ட்ரம்ப்
24 Oct 2025வாஷிங்டன், தென்கொரியாவில் வருகிற 30-ம் தேதி சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசுகிறார்.
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
ரூ.42.45 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
24 Oct 2025சென்னை, ரூ.42.45 கோடியில் நடந்த மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொல்காப்பியப் பூங்காவை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.


