எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழகம் முழுவதும் நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73–வது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்த விழாவில் ஜெயலலிதா சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் 73 கிலோ கேக்கை வெட்டி அனைவருக்கும் அவர்கள் வழங்கினர். மேலும் அன்னதானம், நிதிஉதவிகளையும் அவர்கள் வழங்கினார்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளான நேற்று காலை 9.55 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் திருஉருவச் சிலைக்கும் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து, தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மரியாதை செலுத்தினார்கள்.
சிறப்பு மலர் வெளியீடு
அதனையடுத்து, அம்மாவின் 73-வது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட, முதல் பிரதியை அவைத் தலைவர் இ. மதுசூதனன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, அங்கே குழுமியிருந்த கட்சியின் நிர்வாகிகளுக்கும், கட்சியின் உடன்பிறப்புகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இனிப்பு வழங்கினார்கள்.
அதை தொடர்ந்து பல்வேறு காரணங்களால் மரணமடைந்த 6 கழக உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கு, குடும்ப நல நிதியுதவியாக தலா 3 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 18 லட்சம் ரூபாய்க்கான வரைவோலைகளை கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் வழங்கி, கழக உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
73 கிலோ கேக்
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் ஏற்பாட்டின்பேரில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தின் சார்பில் அம்மாவின் பிறந்த நாளையொட்டி தயார் செய்யப்பட்டிருந்த 72 கிலோ எடை கொண்ட கேக்கினை வெட்டி, நிர்வாகிகளுக்கும், கட்சியின் உடன்பிறப்புகளுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வழங்கினார்கள். அதை தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரும் கட்சியின் உடன்பிறப்புகளுக்கு விருப்ப மனு வழங்கப்பட்டதை அவர்கள் பார்வையிட்டனர்.
மருத்துவ முகாம்
அதை தொடர்ந்து அமைச்சர் சி.விஜயபாஸ்கரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த முகாமில், பொது மருத்துவம், இருதய சிறப்பு பரிசோதனை, தோல், கண் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, மூட்டு வலி, எலும்பு முறிவு சிகிச்சை, இ.சி.ஜி, ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரையின் அளவு கண்டறிதல்; சித்த மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகளும் செய்யப்பட்டு, உரிய மருந்து மாத்திரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், இந்த மருத்துவ முகாம் 26.2.2021 வரை நடைபெற உள்ளது.
குறுந்தகடு வெளியீடு
தமிழ் நாடு பாடநூல் நிறுவனத் தலைவருமான பா. வளர்மதியின் ஏற்பாட்டின்பேரில், அ.தி.மு.க. இலக்கிய அணியின் சார்பில் ‘‘எளிமை முதல்வரின் ஏற்றமிகு அரசு : பாகம் – 2 என்ற குருந்தகட்டினை கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் வெளியிட்டனர். தொடர்ந்து இலக்கிய அணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்ச்சியையும் துவக்கி வைத்து, அனைவருக்கும் அவர்கள் அறுசுவை உணவு வழங்கினர்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, தலைமைக் கழக வளாகத்தை ஒட்டியுள்ள சாலைகளின் இருமறுங்கிலும் கட்சிக் கொடித் தோரணங்கள், குருத்தோலைகள் அழகுற அமைக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. அதே போல், சாலையின் இருமருங்கிலும் தொண்டர்கள் கட்சிக் கொடியினையும், அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அண்ணா தொழிற்சங்கக் கொடியினையும் தங்கள் கைகளில் ஏந்திய வண்ணம் எழுச்சிமிகு வரவேற்பை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பா.பென்ஜமின் உள்ளிட்ட அமைச்சர்கள், துணை செயலாளர்கள் கே.பி.முனுசாமி எம்.பி., ஆர்.வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன், அமைப்பு செயலாளர் ஜே.சி.டி பிரபாகர் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
6 பேருக்கு நிதியுதவி
கட்சி பணியாற்றும்போது, பல்வேறு காரணங்களால் மரணமடைந்த 6 கழக உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் குடும்ப நல நிதியுதவியாக, தலா 3 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ. 18 லட்சத்தை வழங்கினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல்நலக்குறைவால் காலமானார்
14 Jul 2025பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
-
40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
14 Jul 2025சென்னை, டி.எஸ்.பி., உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி
14 Jul 2025பழனி : பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்தார் சிங்கப்பூர் மந்திரி சண்முகம்.
-
கோவா, அரியானா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
14 Jul 2025புதுடெல்லி, கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு : கூடுதல் தலைமை செயலாளர் உறுதி
14 Jul 2025சென்னை : ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்
-
அமர்நாத்தில் பனி லிங்கத்தை 2 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
14 Jul 2025ஸ்ரீநகர், அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
-
அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Jul 2025திருச்சி : 'அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்' என தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
-
தமிழக எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடக்கோரி த.வெ.க. மனு
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர்
-
சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
14 Jul 2025புதுடெல்லி : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
விமான விபத்துக்கு பராமரிப்பு பிரச்சினைகள் காரணமில்லை : ஏர் இந்தியா சி.இ.ஓ. தகவல்
14 Jul 2025புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சி.இ.ஓ.
-
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் : லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
14 Jul 2025மதுரை : முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி
-
நடிகை சரோஜாதேவி மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
14 Jul 2025சென்னை, நடிகை சரோஜாதேவி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;
-
நான் துரோகியா? - மல்லை சத்யா ஆவேசம்
14 Jul 2025சென்னை : ம.தி.மு.க.விற்கு நான் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் நான் துரோகி அல்ல என்று மல்லை சத்யா கூறினார்.
-
ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கு: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு
14 Jul 2025திருப்பத்தூர் : ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். மீண்டும் திட்டவட்டம்
14 Jul 2025சேலம், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஆய்வுக்கு பயந்து விருதுநகரில் 200-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடல்
14 Jul 2025விருதுநகர் : விருதுநகரில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
14 Jul 2025காபுல் : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
புதின் அழகாக பேசுகிறார்; ஆனால் குண்டுகளையும் வீசி விடுகிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்கு
14 Jul 2025வாஷிங்டன், புதின் அழகாக பேசுகிறார் . ஆனால் அனைவர் மீதும் குண்டுகளை போடுகிறார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
உள்ளே செல்ல அனுமதி மறுப்பு: தியாகிகள் கல்லறைக்கு சுவர் ஏறி சென்று முதல்வர் உமர் அஞ்சலி
14 Jul 2025ஸ்ரீநகர் : தியாகிகளின் கல்லறைக்குச் செல்ல முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சுவர் ஏறி குறித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை; தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
14 Jul 2025புதுடெல்லி : பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
நடத்தை விதிகளை மீறல்: சிராஜுக்கு ஐ.சி.சி.அபராதம்
14 Jul 2025லார்ட்ஸ் : 2-வது இன்னிங்சின் போது பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ், ஆக்ரோஷமாக கொண்டாடினார். டக்கெட் முகத்திற்கு முன்பு வந்து முறைத்தப்படி சென்றார்.
-
பயணத்தை தொடங்கியது டிராகன்: சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்
14 Jul 2025நியூயார்க், சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேருடன் பூமியை நோக்கி தனது பயணத்தை டிராகன் விண்கலம் தொடங்கியது. இன்று மாலை அவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர் .
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உயிரிழப்பு
14 Jul 2025காசா முனை : காசாவில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலியாகினர். இதற்கு தொழில்நுட்ப தவறு என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
-
சாய்னா நேவாலின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது
14 Jul 2025ஐதராபாத் : 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கணவர் காஷ்யப்பை பிரிவதாகவும் சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.
-
இந்தியா - சீனா இடையேயான கருத்து பரிமாற்றம் முக்கியம் : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
14 Jul 2025பெய்ஜிங் : இந்தியா - சீனா உறவை தொடர்ந்து இயல்புநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்து பரிமாற்றம் மிகவும் முக்கியம் என்றும் வெளியுறவு