முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவை மிரட்ட வடகொரியா ஏவுகணை சோதனை

புதன்கிழமை, 24 மார்ச் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : கொரிய தீபகற்பத்தில் தென் கொரியா, வடகொரியா ஆகிய நாடுகள் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா, தென் கொரியநாடுகளின் கடற்படை கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுகின்றன. இது வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சகோதரியும் உயர் அதிகார பொறுப்பில் இருக்கும் கிம் யோ ஜாங் அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அதில் நீங்கள் (அமெரிக்கா) அடுத்து வரும் நான்கு ஆண்டுகள் நிம்மதியாக தூங்க வேண்டும் என்று நினைத்தால் முதல் படியாக எங்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது என்றார்.

இந்த நிலையில், வடகொரியா கடந்த வார இறுதியில், குறுகிய தூர ஏவுகணை சோதனை நடத்தியது என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதை அதிபர் ஜோபைடன் நிர்வாகத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வடகொரிய அதிபரின் சகோதரி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சில நாட்களிலேயே ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவை மிரட்ட வடகொரியா இதை செய்துள்ளதாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து