எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : கடந்த சில ஆண்டுகளில் ஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் என்றும் கடினமான தருணங்களிலும் சிறப்பாக ஆடும் திறமை என்னிடம் இருக்கிறது என்றும் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷாரூக் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் ஆட்டத்தில், சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, ஒரு கட்டத்தில் 6.2 ஓவர்களில் 26 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பிறகு ஷாரூக் கான் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் சேர்க்க, அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்தது. எனினும் தோல்வி தவிர்க்க முடியாததானது.
ஆட்டம் முடிந்த பிறகு ஷாரூக் கான் கூறியதாவது.,
ஐ.பி.எல் போட்டியைப் பொருத்தவரையில் பின்வரிசையில் களமிறங்கி அதிரடியாக ரன் சேர்த்து ஆட்டத்தை வெற்றியில் முடிக்க வேண்டும் என்பதுதான் எனக்கு வழங்கப்பட்ட பணி. அதற்காக எல்லா நேரத்திலும் அதிரடியாக ஆடி ரன் சேர்க்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. சில நேரங்களில் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டமிழக்கும்போது, சூழலுக்கு தகுந்தவாறு பொறுப்பை உணர்ந்து விளையாடி, அணியை சரிவிலிருந்து மீட்க வேண்டியதிருக்கும்.
நான் சிறந்த பேட்ஸ்மேன். தமிழக அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக முன்வரிசையில் களமிறங்கி பேட் செய்துள்ளேன். கடினமான தருணங்களிலும் சிறப்பாக ஆடும் திறமை என்னிடம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


