முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டிய மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ள குவியும் மக்கள்

சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : மராட்டியத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

மராட்டியம் உள்பட நாடு முழுவதையும் கொரோனா வைரஸ் உலுக்கி வருகிறது. கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கியுள்ள மாநிலங்களில் மராட்டியம் தான் முதலிடம் வகிக்கிறது. மராட்டிய மாநிலத்தில் நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. 

இதனால், மாநிலத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்குக்கு நிகரான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், அங்குள்ள மக்கள் கொரோனா தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால், மும்பையில் பல தடுப்பூசி மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து போட்டு செல்வதை காண முடிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து