முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.50 லட்சத்தை நெருங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.50 லட்சத்தை நெருங்கியது.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை காட்டுத்தீ போல பரவி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 691- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால்  இதுவரை இல்லாத அளவாக நேற்று 2,767-பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து நேற்று முன்தினம் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 113- ஆக உள்ளது. 

நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 69 லட்சத்து 60 ஆயிரத்து 172- பேர் ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 40 லட்சத்து 85 ஆயிரத்து 110- ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 311- ஆக உயர்ந்துள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 82 ஆயிரமாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து