முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இன்று முதல் வங்கி சேவை நேரம் குறைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 30-ம் தேதி வரை வங்கி சேவை நேரம் குறைக்கப்படுவதாக மாநில வங்கியாளர்கள் குழுமம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் மேலும் சில கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் வாடிக்கையாளர் வங்கி சேவை நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநில வங்கியாளர்கள் குழுமம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி, இன்று முதல் 30-ம் தேதி வரை வங்கி சேவை நேரம் குறைக்கப்படுகிறது என மாநில வங்கியாளர்கள் குழுமம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து