முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வார்டில் பணியாற்றி வந்த மருத்துவர் திடீர் தற்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 2 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் கொரோனா வார்டில் பணியாற்றி வந்த மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை புரட்டி எடுத்து வருகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதி, மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையும் நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனாவின் 2-வது அலைக்கு பாதிப்பு அதிகமடைந்து வருகிறது. அங்கு உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மக்கள் சொந்தமாக ஆக்சிஜன் சிலிண்டரை கொண்டு வர வேண்டும் என சில மருத்துவமனைகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு மிகப் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் விவேக் ராய் என்ற மருத்துவர் பணியாற்றி வந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டார்.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவதால் கடுமையான மன அழுத்ததில் இருந்த மருத்துவர் விவேக் ராய் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய மருத்துவ கவுன்சில் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இந்திய மருத்துவ கவுண்சில் முன்னாள் தலைவர் ரவி வாங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

உத்தரபிரதேசதின் கோரக்பூரை சேந்த சிறந்த மருத்துவர் விவேக் ராய். இந்த பெருந்தொற்று காலத்தில் அவர் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளார்.  இந்த வெறுப்புணர்வு நிறைந்த சூழ்நிலையில் விவேக் ராய் தனது கண்காணிப்பில் உயிரிழந்த கொரோனா நோயாளிகளை நினைத்து அந்த துன்பங்கள் மற்றும் உணர்ச்சிகளுடன் வாழ்வதை விட தனது சொந்த வாழ்க்கையை முடித்துக் கொள்வது போன்ற கடினமான முடிவை எடுத்தார்.  கொரோனா நெருக்கடியை நிர்வகிக்கும் போது மிகப்பெரிய உணர்ச்சிகரமான அழுத்தத்தை கவனத்திற்கு கொண்டு வருகிறது. தடுப்பாடுடைய மருத்துவ வசதிகளால் உருவாக்கப்பட்ட வெறுப்புணர்வால் நிர்வாக கட்டமைப்பு செய்த கொலை தான் இந்த இளம் மருத்துவரின் மரணம். மோசமான அறிவியல், மோசமான அரசியல், மோசமான நிர்வாகம் என்றார்.  தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் விவேக் ராய்க்கு கடந்த வருடம் தான் திருமணம் நடைபெற்றது. அவரது மனைவி 2 மாதங்கள் கர்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து