முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேசத்தில் படகுகள் மோதி விபத்து 26 பேர் பலி

திங்கட்கிழமை, 3 மே 2021      உலகம்
Image Unavailable

Source: provided

டாக்கா : வங்காளதேசத்தில் உள்ள பிரம்மாண்ட நதிகளில் ஒன்றான பத்மா நதியில் சென்ற இரண்டு படகுகள் மோதிக்கொண்டதில் 26 பேர் உயிரிழந்தனர். நேற்று காலை பங்களாபஜார் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகும், மணல் ஏற்றிவந்த மற்றொரு படகும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காணாமல் போனதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படகில் அதிக பயணிகள் சென்றது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

வங்காளதேசத்தில் படகு பயணங்களின் படகு பயணங்களின் போது போதுமான பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காததால் ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கானோர் விபத்தில் உயிரிழக்கின்றனர்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து