எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.ம.மு.கவுடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க படு தோல்வியை சந்தித்துள்ளது. நோட்டாவைக் காட்டிலும் குறைந்த வாக்கு சதவிகிதத்தை தே.மு.தி.க இந்தத் தேர்தலில் பெற்றுள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.கவுடன் சேர்ந்து தே.மு.தி.க களம் கண்டது. 60 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக தே.மு.தி.க தலைவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாசலத்தில், முதல் முறையாக களமிறங்கிய தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், டெபாசிட் இழந்துள்ளார். இதே போல மற்ற பல தே.மு.தி.க வேட்பாளர்களும் டெபாசிட் இழந்து, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தே.மு.தி.க இந்தத் தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் கடந்த தேர்தல்களை விட இந்தத் தேர்தலில் தே.மு.தி.கவின் வாக்கு பூஜ்ஜியம் புள்ளி நான்கு விழுக்காடாக சரிந்துள்ளது.
2005-ம் ஆண்டு தே.மு.தி.க தொடங்கப்பட்ட பின்னர், 2006-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத்தேர்தலில் தே.மு.தி.க தனித்துக் களம் கண்டது. அப்போது விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு விஜயகாந்த் வெற்றி பெற்றார். மற்ற தொகுதிகளில் வெற்றி கைகூடாவிட்டாலும், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 8.4விழுக்காடு வாக்குகளை தே.மு.தி.க பெற்றது. இதையடுத்து நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் தனித்துக் களம் கண்ட தே.மு.தி.க வெற்றியடையாவிட்டாலும், 10 விழுக்காடு வாக்குகளைப் பெற்று பெரிய கட்சிகளை திரும்பிப் பார்க்க வைத்தது.
இதனால் 2011-ல் தே.மு.தி.கவை கூட்டணிக்கு கொண்டு வந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அப்போது 29 தொகுதிகளில் வெற்றி பெற்ற தே.மு.தி.க, 7.9விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. இதையடுத்து, 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க, பாமகவுடன் தே.மு.தி.க களம் கண்டதில் வெற்றி கிடைக்கவில்லை. அதே நேரத்தில் வாக்கு சதவிகிதமும் 5.1 விழுக்காடாகக் குறைந்தது.
இதையடுத்து 2016 -ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகித்துப் போட்டியிட்ட தே.மு.தி.கவின் வாக்கு விகிதம் 2.41 விழுக்காடாக குறைந்தது. பின்னர் 2019 மக்களவைத் தேர்தலில் 2.19 சதவிகிதமாகக் குறைந்த தே.மு.தி.கவின் வாக்கு சதவிகிதம், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 0.43சதவிகிதமாக கடும் சரிவை சந்தித்துள்ளது. அதிலும், நோட்டாவைக் காட்டிலும் தே.மு.தி.க குறைந்த அளவிலான வாக்குகளையே பெற்றுள்ளது.
தனித்துப் போட்டியிட்ட போது செல்வாக்குடன் இருந்த தே.மு.தி.க, கூட்டணி சேர்ந்தவுடன் அதன் வாக்கு சதவிகிதம் குறையத் தொடங்கியது. விஜயகாந்தின் உடல் நலக்குறைவும் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், காலம் கடந்து கூட்டணி குறித்து முடிவெடுத்ததால், தொய்வான தேர்தல் முடிவுகள் வந்துள்ளதாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது அறிக்கையில் தேர்தல் முடிவு குறித்து குறிப்பிட்டுள்ளார். தே.மு.தி.கவின் வாக்கு சதவிகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், அக்கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தே.மு.தி.க தனது முரசு சின்னத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
தே.மு.தி.க பெற்ற வாக்குகள்:
1) 2006 - 8.4%
2) 2009 - 10%
3) 2011 - 7.9%
4) 2014 - 5.1%
5) 2016- 2.41%
6) 2019 - 2.19%
7) 2021 - 0.43%.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 5 days ago |
-
மத நம்பிக்கையில் தலையிட முடியாது: கண்டதேவி தேரோட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
02 Jul 2025மதுரை : ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பழக்க வழக்கம், மத நம்பிக்கை உள்ளது.
-
34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
02 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
-
காவலாளி அஜித்குமார் மரணம்: த.வெ.க. சார்பிலான ஆர்ப்பாட்டம் வரும் 6-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
02 Jul 2025சென்னை : காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் இன்று த.வெ.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ள நிலையில், த.வெ.க.
-
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சனை: மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்
02 Jul 2025சென்னை : தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்
-
பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை : திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jul 2025சென்னை : கேலி செய்பவர்களை குறித்து கவலையில்லை என்றும், பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சென்னையில்
-
திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி காரணமில்லை : மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
02 Jul 2025புதுடெல்லி : கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும
-
குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியில் சிறப்பாக செயல்படுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
02 Jul 2025திருவாரூர், குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய அறிவுறுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து
-
பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
02 Jul 2025சென்னை : ரூ. 1,853 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ள பரமக்குடி- ராமநாதபுரம் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை அ.தி.மு.க.
-
பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கம் : அன்புமணி நடவடிக்கை
02 Jul 2025சென்னை : பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
காசாவில் 60 நாள் போர் நிறுத்தம்; இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்: ட்ரம்ப்
02 Jul 2025வாஷிங்டன் : காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
தைரியமா இருங்க, நாங்க இருக்கோம்: அஜித்குமார் குடும்பத்தாரிடம் எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
02 Jul 2025சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அ.தி.மு.க.
-
கோவில் காவலர் மரண வழக்கு: திருப்புவனத்தில் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை
02 Jul 2025திருப்புவனம் : காவலர்கள் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனத்தில் வ
-
5 ஆண்டுகளும் நான்தான் முதல்வர்: சித்தராமையா திட்டவட்டம்
02 Jul 2025பெங்களூரு : கர்நாடக முதலமைச்சராக 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என்று சித்தராமையா உறுதியாக தெரிவித்தார்.
-
சர்வதேச அணுசக்தி அமைப்புடன் ஒத்துழைப்பு இடைநிறுத்தம்: ஈரான்
02 Jul 2025டெஹ்ரான் : ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார்.
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
02 Jul 2025சென்னை : 2-வது நாளாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்து விற்பனையானது.
-
தேவையில்லாமல் விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது : காவலர்களுக்கு ஏ.டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தல்
02 Jul 2025சென்னை : குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் விசாரணை கைதிகளை காவலர்கள் தேவையில்லாமல் துன்புறுத்தக்கூடாது என்றும் ஏ.டி.ஜி.
-
கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு: இமாச்சலப்பிரதேசத்தில் 10 பேர் பலி
02 Jul 2025சிம்லா : இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 32 மணி நேரத்தில 10 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காண
-
தமிழகத்தில் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
02 Jul 2025சென்னை, தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்
02 Jul 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம் செய்யப்படலாம்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஹிந்து தலைவர்கள் கொலை வழக்கில் பயங்கரவாதிகள் இருவர் கைது
02 Jul 2025சென்னை : ஹிந்து முன்னணி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு; அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'பைப் குண்டு' வைத்தது என, பல்வேறு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வ
-
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய முன்னணி வீரர், வீராங்கனைகள்
02 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சீமான் மீதான டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை
02 Jul 2025மதுரை : சீமான் மீது டி.ஐ.ஜி., வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
சமிக்கு ஐகோர்ட் உத்தரவு
02 Jul 2025இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்ன
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
02 Jul 2025ஒகேனக்கல் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.