முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

75 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் ஐதராபாத்திலிருந்து சென்னை வந்தது

செவ்வாய்க்கிழமை, 4 மே 2021      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்திலிருந்து 75 ஆயிரம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி நேற்று சென்னை வந்தடைந்தது. 

தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஆகியவை பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் ஐதராபாத்திலிருந்து 75 ஆயிரம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி நேற்று சென்னை வந்தடைந்தது. முன்னதாக பிரேசில், இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து