முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா நோயாளிகளுக்கு நாள்தோறும் ரூ. 5 ஆயிரம் : அரியானா முதல்வர் அறிவிப்பு

வியாழக்கிழமை, 6 மே 2021      இந்தியா
Image Unavailable

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக நாள்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்  கூறியதாவது:-

 கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் நாள்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். அதிகபட்சமாக 7 நாள்களுக்கு என ஒரு நபருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்கப்படும்.அவர்களது மருத்துவ செலவுக்காக இந்தத் தொகை வழங்கப்படும். இதே போன்று தனியார் மருத்துவமனைகளும் அவர்களுக்கு ரூ. 1,000 ஒதுக்க வேண்டும். ஒரு நாளைக்கு ரூ. 1000 வீதம் 7 நாள்களுக்கு ரூ. 7,000 வழங்க வேண்டும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து