எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் ஊரடங்கு முடியும் வரையில் 24 மணி நேரமும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
முழு ஊரடங்கு காலத்தில் கொரோனா தொற்று காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொற்றாளர்களுக்கும், அவர்களுக்கு உதவியாக இருப்பவர்களுக்கும் பிற நோய்களால் அங்கே அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கும், அவர்களைக் காண வருபவர்களுக்கும் 24 மணி நேரமும் உணவு வழங்க வேண்டும் என்று திட்டமிட்டோம். இதற்காக 94 மாதங்களாக மாதந்தோறும் ஒரு நாள் இலவச உணவு வழங்கி வரும் சங்கமித்ரா எனும் தனியார் அமைப்பினை தொடர்பு கொண்டு பேசினோம்.
ஊரடங்கில் 24 மணி நேரமும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இலவச உணவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். எங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தனியார் அமைப்பு, இலவச உணவை வழங்க முன்வந்தது. அதன்படி, 24 மணி நேரமும் இலவச உணவு வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவமனையின் இயக்குனர் இருவரும் இணைந்து இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துள்ளனர் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


