முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் பூடான் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பிரதமர் மோடியுடன் பூடான் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைக்கு தனது ஆதரவை அவர் வெளிப்படுத்தினார்.

கொரோனா வைரசின் 2-வது அலையால் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள இந்தியாவுக்கு சர்வதேச நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன.  அந்த வகையில், இந்திய பிரதமர் மோடியுடன் நேற்று  தொலைபேசி வாயிலாக பேசிய பூடான் பிரதமர் லோடே ஷெரிங்,  கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.  

 நெருக்கடியான காலத்தில் இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதற்காக பூடான் பிரதமருக்கும் பூடான் மக்களுக்கும் தனது நன்றியை பிரதமர் மோடி இந்த உரையாடலின் போது தெரிவித்துக் கொண்டார். அதே போல், பூடானில் கொரோனாவுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி பாராட்டியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூடானில் இதுவரை 1,241- பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல், பூடானில் வயது வந்த மக்களில் 93 சதவீதம் பேருக்கு கடந்த மாதமே தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து