முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் பதிலடி கொடுப்போம்: ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 11 ஜூன் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : ரஷ்ய அரசானது தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் அமெரிக்கா வலுவான பதிலடி கொடுக்கும் என்று அதிபர் ஜோபைடன் தெரிவித்தார். 

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் கடந்த ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்றார். அப்போது அந்த நாட்டை கொரோனா தொற்று ஆட்டிப்படைத்து கொண்டிருந்தது. இப்போது அந்த தொற்றில் இருந்து அமெரிக்கா மீண்டு வந்து விட்டது.  

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். 8 நாள் ஐரோப்பிய பயணத்தில் முதல் கட்டமாக அவர் நேற்று முன்தினம் இங்கிலாந்து சென்றார். 

ஐரோப்பிய பயணத்தின் இறுதிகட்டமாக சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகருக்கு செல்லும் ஜோ பைடன், அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசுகிறார். பருவநிலை மாற்றம், உக்ரைனில் ரஷ்ய ராணுவ தலையீடு, ரஷ்யாவின் சட்டவிரோத இணைய தள தாக்குதல், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நாவல்னி விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அவர் புடினுடன் விவாதிப்பார் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் சபோல்கில் அமெரிக்க விமானப்படை தளத்தில் அவர் அமெரிக்க படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பேசினார். அப்போது அவர் ரஷ்யாவை கடுமையாக எச்சரித்தார். அவர் கூறியதாவது:-

ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கிற போது ஒரு தெளிவான செய்தியை வழங்கப் போகிறேன். நாம் ரஷ்யாவுடன் மோதலை எதிர்பார்க்கவில்லை. ரஷ்ய அரசானது தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் அமெரிக்கா வலுவான பதிலடி கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து