முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார் விபத்தில் காயமின்றி தப்பினார் அரியானா முன்னாள் முதல்வர்

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

சண்டிகர் : அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா கார் விபத்தில் காயமின்றி தப்பினார்

அரியானா மாநில முன்னாள் முதல்வராக  பதவி வகித்தவர் ஓம் பிரகாஷ் சவுதாலா. சவுதாலா ஒரு காரில் குர்கான்-பாட்லி-ஜாஜ்ஜர் சாலையில் சென்று கொண்டிருந்தார். காரின் முன்பக்க இருக்கையில் டிரைவர் அருகே அவர் அமர்ந்திருந்தார்.  அப்போது மற்றொரு காருடன், சவுதாலா பயணித்த கார் மோதியது.

உடனே சவுதாலாவின் கார் ஏர் பேக்குகள் விரிந்து கொண்டன. எனவே சவுதாலாவுக்கு சிறு சிராய்ப்பு மட்டும் ஏற்பட்டது. காரில் இருந்த மற்றவர்களுக்கும் சிராய்ப்பு காயங்களே ஏற்பட்டன என குர்கான் போலீசார் தெரிவித்தனர்.  ஓம் பிரகாஷ் சவுதாலா தற்போது நலமுடன் இருப்பதாக அவரது கட்சி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து