முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2022-ல் விமானப்படையில் ரபேல் இணைக்கப்படும்: விமானப்படை தலைவர் பதாரியா தகவல்

சனிக்கிழமை, 19 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : இந்திய விமானப்படையில், வரும் 2022-ம் ஆண்டில் ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும் என விமானப்படை தலைவர் ஆர்.கே.எஸ். பதூரியா கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2016-ம் ஆண்டு கையெழுத்தானது. இதன்படி ரபேல் விமானங்கள் இந்தியா வரத் துவங்கி உள்ளது. 

இந்நிலையில், ஐதராபாத்தின் விமானப்படை அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் விமானப்படை தலைவர் பதாரியா கூறியதாவது:- 

ரபேல் போர் விமானங்களை விமானப்படையில் 2022-ம் ஆண்டில் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனை முன்னரே கூறி உள்ளேன். கொரோனா காரணமாக ஒன்றிரண்டு விமானங்கள் தாமதாக வந்தன. மற்றவை குறிப்பிட்ட காலத்திற்குள் வந்தடைந்தது. இதனால், திட்டமிட்டபடி ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து