எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ரியாத்: கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் வள நாடுகள் அமைப்பான ஒபெக் இணங்கியுள்ளது. உலக அளவில் தேவை அதிகரித்திருப்பதால் அதற்கேற்ப தினசரி 4 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்ய ஒபெக் நாடுகள் முடிவு செய்துள்ளன. மேலும் அடுத்த ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 58 லட்சம் பீப்பாய் அளவுக்கு குறைக்க மற்ற எண்ணெய் உற்பத்தி நாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கைவிடுவதாக ஒபெக் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒபெக் அமைப்பின் இந்த முடிவால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் தொடர் விலையேற்றம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே எழுந்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உச்சம் அடைந்துவரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையை குறைக்கக் கோரி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை புதிதாக பொறுப்பேற்ற மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


