முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா விதிகளை கடைபிடியுங்கள்: கேரள மக்களுக்கு ராகுல் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 30 ஜூலை 2021      அரசியல்
Image Unavailable

கொரோனா விதிகளை கடைபிடிக்குமாறு கேரள மக்களுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.  

கேரளாவில் கொரோனாவின் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 3-வது நாளாக 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தேசிய அளவில் தினசரி பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் போது கேரளாவில் மட்டும் 13 சதவீதமாக உள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் கேரள அதிகாரிகளுக்கு வழிகாட்டுவதற்காக சிறப்பு குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தேசிய நோய் கட்டுப்பாட்டு வாரிய மையத்தின் இயக்குநர் எஸ்.கே.சிங் தலைமையில் 6 பேர் கொண்ட மத்திய குழு நேற்று கேரளா சென்றுள்ளது.

இந்த நிலையில் கேரள மக்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா விதிகளை கடைபிடிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கேரளாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவது கவலையாக உள்ளது. மாநிலத்தில் உள்ள சகோதர, சகோதரிகள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளையும், விதிமுறைகளையும் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  தயவுசெய்து அனைவரும் கவனமுடன் இருங்கள். இவ்வாறு ராகுல் காந்தி அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து