முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காபூலில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்

புதன்கிழமை, 4 ஆகஸ்ட் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தீவிரவாதிகள் சக்திவாய்ந்த தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தினர்.

இதுகுறித்து ஆப்கன் ஊடகங்கள் கூறுகையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் செவ்வாய்க்கிழமை இரவு தீவிரவாதிகள் சக்திவாய்ந்த தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தினர். இந்த குண்டுவெடிப்புகள் அங்கு அமைந்துள்ள வெளிநாட்டுத் தூதரகங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதா? என்று அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்தனர். உயிரிழப்பு பற்றி விவரம் எதுவும் இல்லை. பல இடங்களில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தினர். தற்போது காபூலில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் பிஸ்மில்லா கான் தெரிவித்துள்ளார்” என்று செய்தி வெளியானது

இந்த நிலையில் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேற்றத்துக்குப் பிறகு, இராக், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய எல்லையோரப் பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து