முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் அரசு புறநகர் மருத்துவமனை: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் 15 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு, தரம் உயர்த்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட அம்மருத்துவமனையை பார்வையிட்டு, நவீன மருத்துவ கருவிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். 

பெரியார் நகர், அரசு புறநகர் மருத்துவமனை கடந்த 34 ஆண்டுகளாக 100 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வந்தது. தற்போது அம்மருத்துவமனை 300 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் வகையில் பெரியோர்களுக்கு 200 படுக்கைகளும், குழந்தைகளுக்கு 100 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது.  

இம்மருத்துவமனையில் நோயாளிகளின் சிகிச்சைக்காக சி.டி. ஸ்கேன், உயர் ரக கருவிகள் கொண்ட நவீன ஆய்வுக்கூடம், நுண்கதிர் வீச்சகம், 6 KL கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்க், ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய உயர்ரக மருத்துவ உபகரணங்களுடன்  10 படுக்கைகள் கொண்ட முழு அளவிலான தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரகால சிகிச்சைப் பிரிவு, 500 KVA கூடுதல் டிரான்ஸ்பார்மர், 250 KVA ஜெனரேட்டர் வசதி, குளிர்சாதன வசதி கொண்ட அறுவை அரங்குகள், நோயாளிகளின் விவரங்கள் உறவினர்கள் அறியும் வகையில் நவீன டிஜிட்டல் தகவல் பலகை, தாய்சேய் நலன் காக்க இரத்த சேமிப்பு வசதிகளுடன் கூடிய சிறப்பு மகப்பேறு பிரிவு, குளிர்சாதன வசதி கொண்ட சிறப்பு வார்டுகள், சிறப்பு புறநோயாளிகள் பிரிவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

மேலும், மருத்துவமனை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதோடு, 24 மணி நேரமும் சுழற்சிமுறையில் இயங்கும் புறகாவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.  இத்திறப்பு விழா நிகழ்ச்சியில், அரசின் 100 நாள் சாதனைகளை விளக்கும் வகையில் எவர்வின் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் ஜெ. ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து