முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 2.24 கோடி தேவஸ்தானம் தகவல்

புதன்கிழமை, 18 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருமலை: திருப்பதி ஏழுமைலயான் கோவிலில் பக்தர்கள் ரூ.2.24 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்  திருப்பதி ஏழுமைலயான் கோவிலில் கடந்த திங்கட்கிழமை  21 ஆயிரத்து 750 பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர். அவர்களில் 10 ஆயிரத்து 581 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியிருந்தனர். உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் ரூ. 2 கோடியே 24 லட்சம் இருந்தது. இவ்வாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து