முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதுவரை 57.22 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு தகவல்

வெள்ளிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

நாட்டில் இதுவரை மொத்தம் 57.22 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலையில் நாடு முழுவதும் பரவலாக அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.  இந்நிலையில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் பல்வேறு மாநிலங்களில் குறைந்து ஊரடங்கில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 36,571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்து உள்ளது.  

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,71,282 பேருக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று காலை 7 மணிவரை மொத்தம் 57,22,81,488 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து