முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊடகங்களின் மீது ராகுல்காந்தி தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 12 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 70 ஆண்டுகால கடின உழைப்பு அனைத்தும் வெறும் 7 ஆண்டுகளில் பா.ஜ.க.வால் விற்கப்பட்டது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் எப்போதுமே நாட்டிற்கு ஒரு மூலக்கல்லாக உள்ளது, எங்கள் 70 ஆண்டுகால கடின உழைப்பு அனைத்தும் வெறும் ஏழு ஆண்டுகளில் பா.ஜ.க.வால் விற்கப்பட்டது. மும்பை தாக்குதல் நடந்தபோது, பிரதமர் மன்மோகன் சிங் ஒரு பலவீனமான பிரதமர் என்று ஊடகங்களால் முத்திரை குத்தப்பட்டார். புல்வாமா தாக்குதலின் போது ஊடகங்கள் எந்த கேள்விகளையும் எழுப்பவில்லை

காங்கிரஸ் கட்சி கடந்த 70 ஆண்டுகளாக நாட்டுக்காக பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. 70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டதை பா.ஜ.க. கடந்த 7 ஆண்டுகளில்  விற்றுவிட்டது. பா.ஜ.க. தலைமையிலான அரசின் செயல்பாடுகள் குறித்து ஊடகங்கள் ஏதும் கேள்வி கேட்காமல் மவுனமாக இருக்கின்றன. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொடர்ந்து ஊடகங்கள் விமர்சித்தன. அதற்கு முரணாக ஊடகங்கள் இப்போது செயல்படுகின்றன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து