முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியீடு : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 23 செப்டம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருப்பதி : இன்று 24-ம் தேதி முதல் ரூ. 300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட்டுகள் காலை 9 மணி அளவில் வெளியிடப்படும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சர்வ தரிசனம் கடந்த நான்கு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பக்தர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் கடந்த ஒரு வாரமாக தினமும் 2,000 சர்வ தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசம் பக்தர்கள் தங்கும் விடுதியில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சர்வ தரிசன டிக்கெட்டுக்களை பெற பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறியதாவது:-

சர்வ தரிசன டோக்கன் பெற பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் வரும் 25-ம் தேதி(நாளை) முதல் ஆன்லைனில் டோக்கன்கள் வழங்கப்படும். டோக்கன்களை பெற்ற பக்தர்கள் 26-ம் தேதி சுவாமியை தரிசிக்கலாம். இந்த டோக்கன்கள் வரும் அக்டோபர் 31-ம் தேதி வரை வழங்கப்படும். இரண்டு கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட பக்தர்கள் அல்லது கொரோனா இல்லை எனும் சான்றிதழ் பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். இன்று 24-ம் தேதி முதல் ரூ. 300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட்டுகள் காலை 9 மணி அளவில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து