எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர ஒயாது உழைப்போம் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். சபதம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆ.ரால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கம் பொன்விழா கொண்டாடுகிறது.
அ.தி.மு.க. 17.10.2021 அன்று 49 ஆண்டு கால வெற்றிப் பயணத்தை நிறைவு செய்து, 50-வது பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதையும், இந்தப் பொன் விழா ஆண்டில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் பெரும் பாக்கியம் எனக்கு இறைவனால் அருளப்பட்டிருக்கிறது என்பதையும் நன்றியுடனும், மகிழ்ச்சியுடனும் நினைவில் கொள்கிறேன்.
கட்சி பணியாற்றிய நேரத்தில் உயிர் நீத்த உத்தமத் தொண்டர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன். கட்சியை உயிரினும் மேலாய் மதித்து வாழும் தொண்டர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
அரசியல் வரலாற்றை உற்று நோக்கிப் பார்த்தால், ஏதோ ஒரு கணக்கோடுதான் அரசியல் கட்சிகள் தோன்றுகின்றன. ஆனால், கணக்கு கேட்டதற்காக, ஊழலைத் தட்டிக் கேட்டதற்காகப் பிறந்த ஒரே இயக்கம் அ.தி.மு.க. அதனால் தான், தோற்றுவிக்கப்பட்ட ஆறே மாதங்களில் திண்டுக்கல் மக்களவை இடைத் தேர்தலைச் சந்தித்து வெற்றி வாகை சூடி வரலாற்று அதிசயத்தைப் படைத்தது.
இதன் தொடர்ச்சியாக, 1977ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில், ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கிய தி.மு.க. ஆட்சி மக்களால் அகற்றப்பட்டு, அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்தது. புரட்சித் தலைவரின் ஆட்சியை எப்படியாவது அகற்றிவிட வேண்டும் என்ற தி.மு.க.வின் சதித் திட்டம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தவரை செல்லுபடியாகாமால் இருந்தது.
அவரின் மறைவிற்குப் பிறகு, சில துரோகிகளின் துணையோடு கட்சியை அழிக்க நினைத்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இதன் விளைவு, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. “சிங்கத்தின் குகைக்குள் பிளவு வந்தால் சிறு நரிகள் நாட்டாமையாகிவிடும்' என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டு, அதன் விளைவாக மக்கள் விரோத ஆட்சி மீண்டும் உருவானது. கட்சி பிளவுபட்டதன் காரணமாக தி.மு.க. ஆட்சியைப் பிடித்தாலும், சேவல்' சின்னத்தில் தனியாகக் களம் கண்டு, தனக்குள்ள மக்கள் செல்வாக்கை நிரூபித்து எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெயலலிதா. இதன்மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமை அவரை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து பிளவுபட்ட கட்சி மீண்டும் ஒன்றிணைந்தது. முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதன் காரணமாக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதையடுத்து, 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்று, ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
1991-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரையிலான அம்மா ஆட்சிக் காலத்தில், தொட்டில் குழந்தைத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கியது, மகளிருக்கு என்று தனிக் காவல் நிலையங்களை உருவாக்கியது, உலகத் தமிழ் மாநாட்டினை நடத்திக் காட்டியது, உலகத் தரம் வாய்ந்த நேரு விளையாட்டு அரங்கத்தை கட்டியது, காவல்துறையை நவீனமயமாக்கியது என பல்வேறு திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தப்பட்டன.
1996-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக நெருப்பாற்றிலே நீந்தி, சவால்களை எதிர்கொண்டு, தடைக்கற்களை தகர்த்தெறிந்து, 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கட்சியை அமோக வெற்றி பெறச் செய்து, இரண்டாவது முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.
2001 முதல் 2006 வரையிலான கால கட்டத்தில், பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. நல்லாட்சி நல்கிய அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுவது கடினம்என்று உணர்ந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி2006-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார். இருப்பினும், தி.மு.க. தலைமையில் மைனாரிட்டி ஆட்சிதான் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது.
2011-ஆம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்று நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
இதனைத் தொடர்ந்து, 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலில், அ.தி.மு.க. முதன் முறையாக 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டு, 32 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்ற பெருமையை பெற்றது.
2021-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. மூன்றாவது முறையாக மீண்டும் தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், எதிரணியினர் அமைத்த மெகா கூட்டணி, அள்ளி வீசிய சாத்தியமற்ற தேர்தல் வாக்குறுதிகள் காரணமாக ஆட்சி நம்மைவிட்டு கைநழுவிப் போய்விட்டது.
போலி வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தி.மு.க., எந்தெந்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் தி.மு.க.விற்கு வாக்களித்தார்களோ அவற்றை நிறைவேற்ற முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில், விடியலை நோக்கி எனப் பிரச்சாரம் செய்துவிட்டு இன்று விடியா அரசாக காட்சி அளிக்கிறது. சட்டப்பேரவை அடுத்த வாரிசின் புகழ்பாடும் மன்றமாகிவிட்டது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு குடும்பத்தின் பிடியில் தி.மு.க. சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பதுபோல தி.மு.க.வின் சாயம் வெளுத்துவிட்டது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க.விற்கு மரண அடி கொடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்.
அ.தி.மு.க. தோன்றி 49 ஆண்டுகள் நிறைவு பெற்று, 50-வது பொன் விழா ஆண்டு தொடங்கும் இப்பொன்னாளில், ஜெயலலிதாவின் வழிகாட்டுதலோடு, அவர் வகுத்துக் கொடுத்த பாதையில் பயணித்து, மீண்டும் அதிமுக ஆட்சி மலர ஒயாது உழைப்போம் என நாம் அனைவரும் சூளுரைப்போம்.
இவ்வாறு ஓ.பி.எஸ்.தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 5 days ago |
-
34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
02 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
-
மத நம்பிக்கையில் தலையிட முடியாது: கண்டதேவி தேரோட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
02 Jul 2025மதுரை : ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பழக்க வழக்கம், மத நம்பிக்கை உள்ளது.
-
காவலாளி அஜித்குமார் மரணம்: த.வெ.க. சார்பிலான ஆர்ப்பாட்டம் வரும் 6-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
02 Jul 2025சென்னை : காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் இன்று த.வெ.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ள நிலையில், த.வெ.க.
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
02 Jul 2025சென்னை : 2-வது நாளாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்து விற்பனையானது.
-
ஹிந்து தலைவர்கள் கொலை வழக்கில் பயங்கரவாதிகள் இருவர் கைது
02 Jul 2025சென்னை : ஹிந்து முன்னணி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு; அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'பைப் குண்டு' வைத்தது என, பல்வேறு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வ
-
கோவில் காவலர் மரண வழக்கு: திருப்புவனத்தில் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை
02 Jul 2025திருப்புவனம் : காவலர்கள் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனத்தில் வ
-
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சனை: மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்
02 Jul 2025சென்னை : தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்
-
தமிழகத்தில் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
02 Jul 2025சென்னை, தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை : திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jul 2025சென்னை : கேலி செய்பவர்களை குறித்து கவலையில்லை என்றும், பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சென்னையில்
-
குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியில் சிறப்பாக செயல்படுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
02 Jul 2025திருவாரூர், குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய அறிவுறுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து
-
தைரியமா இருங்க, நாங்க இருக்கோம்: அஜித்குமார் குடும்பத்தாரிடம் எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
02 Jul 2025சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அ.தி.மு.க.
-
சர்வதேச அணுசக்தி அமைப்புடன் ஒத்துழைப்பு இடைநிறுத்தம்: ஈரான்
02 Jul 2025டெஹ்ரான் : ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார்.
-
காசாவில் 60 நாள் போர் நிறுத்தம்; இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்: ட்ரம்ப்
02 Jul 2025வாஷிங்டன் : காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
தேவையில்லாமல் விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது : காவலர்களுக்கு ஏ.டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தல்
02 Jul 2025சென்னை : குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் விசாரணை கைதிகளை காவலர்கள் தேவையில்லாமல் துன்புறுத்தக்கூடாது என்றும் ஏ.டி.ஜி.
-
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய முன்னணி வீரர், வீராங்கனைகள்
02 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பகல்காம் தாக்குதலுக்கு கண்டனம்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
02 Jul 2025வாஷிங்டன், குவாட் அமைப்பு மாநாட்டில் காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
-
பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
02 Jul 2025சென்னை : ரூ. 1,853 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ள பரமக்குடி- ராமநாதபுரம் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை அ.தி.மு.க.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
02 Jul 2025ஒகேனக்கல் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி காரணமில்லை : மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
02 Jul 2025புதுடெல்லி : கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும
-
பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கம் : அன்புமணி நடவடிக்கை
02 Jul 2025சென்னை : பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்
02 Jul 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம் செய்யப்படலாம்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சமிக்கு ஐகோர்ட் உத்தரவு
02 Jul 2025இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்ன
-
5 ஆண்டுகளும் நான்தான் முதல்வர்: சித்தராமையா திட்டவட்டம்
02 Jul 2025பெங்களூரு : கர்நாடக முதலமைச்சராக 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என்று சித்தராமையா உறுதியாக தெரிவித்தார்.
-
முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்கும் அமெரிக்கா
02 Jul 2025புதுடெல்லி : இரண்டு கட்டங்களாக அமெரிக்கா ஹெலிகாப்டர்களை வழங்க உள்ள நிலையில், முதற்கட்டமாக இந்த மாதத்திற்குள் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியா வரவுள்ளன.
-
குரூப் 4 தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு
02 Jul 2025சென்னை : குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.