எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

5 மாநில தேர்தலில் அனைத்து பிரிவினரிடமும் நமது கொள்கைகள், திட்டங்கள் சென்றடையும் வகையில் பிரச்சாரங்கள் அமைய வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி பேசினார்.
அகில இந்திய காங்கிரஸ் காரிய கூட்டம் கடந்த 16-ம் தேதி நடத்தப்பட்டது. அப்போது புதிய தேசிய தலைமையை தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் நிர்வாகிகளை தேர்வு செய்து இறுதியாக அகில இந்திய தலைவரை தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, விலை வாசி உயர்வு உள்ளிட்ட மத்திய அரசுக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்தனர்.
இது சம்பந்தமாக விவாதிப்பதற்காகவும், 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காகவும் நேற்று மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட்டினார். இந்த கூட்டம் நேற்று காலை தொடங்கியது. சோனியா காந்தி தலைமை தாங்கினார். ராகுல்காந்தி மற்றும் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். 5 மாநில தேர்தலை எப்படி சந்திப்பது என்று விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
காங்கிரஸ் கட்சியை அடிமட்ட அளவில் இருந்து தீவிரமாக நாம் வளர்க்க வேண்டும். இந்தியாவில் ஜனநாயகமும், அரசியல் சாசன சட்டங்களும் நாட்டுக்கு முக்கியத்துவம் கொண்டது. ஆனால் இன்றைய ஆட்சியில் அவை வீழ்த்தப்பட்டு வருகின்றன. இதை முறியடிக்க வேண்டும். இது சம்பந்தமாக மக்களிடம் நாம் பிரசாரத்தை கொண்டு சேர்க்க வேண்டும். நமக்கு எதிராக நடக்கும் தவறான பிரசாரங்களை முறியடிக்க வேண்டும். கட்சியில் உள்ள அனைவரும் தங்களுடைய விருப்பு, வெறுப்புகளை மறந்து கட்சிக்காக பாடுபட வேண்டும்.
கட்சியில் கட்டுப்பாடு, ஒற்றுமை என்பது மிகவும் அவசியமானது. இவை இருந்தால் மட்டும்தான் காங்கிரஸ் கட்சியை வளர்க்க முடியும். எனவே அதன்படி அனைவரும் செயல்பட முன்வர வேண்டும். காங்கிரசின் கொள்கைகளை அடிமட்ட அளவில் கொண்டு சேர்க்க வேண்டும். தேசம் எதிர் கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்த தகவல்களை அடிமட்ட மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். இதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். 5 மாநில தேர்தலில் அனைத்து பிரிவினரிடமும் நமது கொள்கைகள், திட்டங்கள் சென்றடையும் வகையில் பிரசாரங்கள் அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி வருகிற நவம்பர் 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மார்ச் 31-ம் தேதி முதல் மாவட்ட அளவில் தலைவர், நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். ஜூலை 21-ம் தேதி முதல் ஆகஸ்டு 20-ம் தேதி வரை மாநில தலைவர், துணை தலைவர், செயற்குழு உறுப்பினர், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர் தேர்தல் நடக்கும். அடுத்த ஆண்டு ஆகஸ்டு 21 முதல் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் அகில இந்திய தலைவர், நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். முன்னதாக வருகிற நவம்பர் 7-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அனைத்து பகுதிகளிலும் விலைவாசி உயர்வை எதிர்த்து யாத்திரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
20 Jul 2025சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு
20 Jul 2025மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம்: உதயநிதி ஸ்டாலின்
20 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
சேலத்தில் இன்று நடைபெறுகிறது த.வெ.க.வின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
20 Jul 2025சென்னை : சேலத்தில் இன்று மாலை பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
-
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி
20 Jul 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
-
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தில் பேச மத்திய அரசு தயார்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதி
20 Jul 2025புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாராளுமன்றத்தில் மத்திய அரசு பேச தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.
-
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மூவர் இடைநீக்கம்: ராமதாஸ் அதிரடி
20 Jul 2025சென்னை : கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பா.ம.க.
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
20 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்
20 Jul 2025மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
அமர்நாத் யாத்திரை: ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
20 Jul 2025ஜம்மு : அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
-
மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்
20 Jul 2025ரோம் : ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
20 Jul 2025புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவ
-
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க பரிசல் இயக்கவும் மீண்டும் தடை
20 Jul 2025தருமபுரி : ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,000 கன அடியிலிருந்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்
-
முதற்கட்ட பயணம் வெற்றி: தமிழக மக்களுக்கு இ.பி.எஸ். நன்றி
20 Jul 2025சென்னை : "மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்ற எனது முதற்கட்ட பயணத்தை வெற்றிகரமாக மாற்றி காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்று அ.தி.மு.க.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தாமதமாக இயக்கம்
20 Jul 2025சென்னை : சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.
-
பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிப்பு
20 Jul 2025புதுடில்லி : பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.