முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை: இத்தாலி அரசு அதிரடி அறிவிப்பு

வியாழக்கிழமை, 25 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

மக்கள் அனைவரும் வரும் டிசம்பர் 6-ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் சினிமா தியேட்டர்கள், ஓட்டல்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வருவதற்கு அனுமதியில்லை என தடை விதித்து இத்தாலியில் அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவின் முதல் அலையில் இத்தாலி கடுமையாக  பாதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு மார்ச் முதல் அக்டோபர் வரை இத்தாலியில் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன. உலகம் முழுவதும் மக்கள் இந்த தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். இதனால் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது.

பெரிதும் அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்ட கொரோனாவின் 2-வது அலையில் இருந்து, பெரும்பாலான நாடுகள் தப்பிப் பிழைத்தன. தற்போது கொரோனாவின் அடுத்த அலை குறித்த அச்சம் நீடிக்கும் நிலையில், மக்கள் அனைவரும் அவசியம் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என இத்தாலி அரசு அறிவித்தது. தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும், இத்தாலியில் ஏனோ மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மெத்தனமாக உள்ளனர். இதையடுத்து இத்தாலி அரசு தற்போது கடுமையான நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வரும் டிசம்பர் 6-ம் தேதிக்குள் மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். வீடு, வீடாக கணக்கெடுக்க உள்ளோம். 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் வரும் 6-ம் தேதிக்கு பின்னர் சினிமா தியேட்டர்கள், ஓட்டல்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வருவதற்கு அனுமதியில்லை.

பொது போக்குவரத்தை பயன்படுத்தவும் அவர்களுக்கு அனுமதியில்லை என்று தடை விதித்து, அந்நாட்டு பிரதமர் மரியோ டிராகி அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து