முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிஷப் பந்த் உள்ளிட்ட 4 வீரர்களை தக்கவைக்கிறது டெல்லி கேபிடல்ஸ்

வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லி கேபிடல்ஸ் அணி ரிஷப் பந்த், பிருத்வி ஷா, அக்‌ஷர் படேல் உள்ளிட்ட 4 வீரர்களை மீண்டும் தக்கவைக்கிறது.

2 அணிகள்...

ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னோ, அகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னௌ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது. ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ஏற்கெனவே கடந்த 2016-17 காலகட்டத்தில் ரைசிங் புணே சூப்பா் ஜெயன்ட் அணி உரிமையாளராக இருந்தது.

4 வீரர்கள்...

ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக வீரர்களைத் தக்கவைப்பது தொடர்பான பணிகளில் அணிகள் இறங்கியுள்ளன. இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் தொடரவுள்ளார். ரிஷப் பந்த், பிருத்வி ஷா, அக்‌ஷர் படேல், அன்ரிச் நோர்கியா ஆகிய நால்வரையும் டெல்லி அணி தக்கவைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. 2020 போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயஸ் ஐயர், ஏலத்தில் பங்குபெற முடிவு செய்துள்ளார். அதனால் அவரை டெல்லி அணியால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. 

கேப்டனாக...

இரு புதிய அணிகளில் ஏதாவது ஒன்று ஷ்ரேயஸ் ஐயரை கேப்டனாகத் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 8 பழைய அணிகளில் 4 அணிகளில் புதிய கேப்டன்கள் நியமிக்கப்படவுள்ளதால் ஷ்ரேயஸ் ஐயர் முன்பு பல வாய்ப்புகள் உள்ளன. 2022 ஐபிஎல் போட்டிக்காகத் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை டெல்லி கேபிடல்ஸ் அணி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து