முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொப்பையாறு நீர்த்தேக்கத்தில் இருந்து 19-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க உத்தரவு

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை ; தருமபுரி மாவட்டம் தொப்பையாறு நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் 19-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

 

தருமபுரி மாவட்டம், தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2021-2022ஆம் ஆண்டில் இரண்டாம் போக பாசனத்திற்கு 19.01.2022 முதல் 55 நாட்களுக்கு மொத்தம் 253.90 மி.க.அடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.  இதன் மூலம் தருமபுரி மாவட்டத்தில் 2050 ஏக்கர் நிலங்களும் சேலம் மாவட்டத்தில் 3280 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 5330 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து